இஞ்சி-நெல்லிக்காய் ஊறுகாய் செய்வது எப்படினு பார்க்கலாம் வாங்க ..!!

March 18, 2023 at 7:56 am
pc

இஞ்சி-நெல்லிக்காய் பித்தம் ஏற்படுவதை தடுப்பதோடு, மஞ்சள் காமாலை வராமல் தடுக்கும். கல்லீரலை சிறப்பாகச் செயல்பட வைக்கும். செரிமானத்தைத் தூண்டும். ரத்தக் கொதிப்பைக் குறைக்கும். நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகப்படுத்தும். இஞ்சி நெல்லி இரண்டையும் ஊறுகாயாகச் செய்யும்போது, அதன் நுண் சத்துக்கள் பாதுகாக்கப்படுகின்றது.

தேவையானவை:

இஞ்சி, நெல்லிக்காய் – தலா 100 கிராம்
பூண்டு – 50 கிராம்
வெல்லம் – சிறிது
பெருங்காயத் தூள் – 1/2 மேசைக்கரண்டி
மிளகாய்த் தூள் – 3 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் – 2 மேசைக்கரண்டி
வெந்தயம் – வறுத்துப் பொடித்தது
நல்லெண்ணெய் – 2 மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு

செய்முறை:

இஞ்சியைத் தோல் சீவி, பூண்டுடன் அரைத்துக்கொள்ளவும். எண்ணெயைச் சூடாக்கி, இஞ்சி, பூண்டு விழுது, வேகவைத்து கொள்ளவேண்டும். மசித்த நெல்லி, வெல்லம், மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்பு, வறுத்துப் பொடித்த வெந்தயம், பெருங்காயத் தூள் தாளித்து கொள்ளவும் எண்ணெய் மிதக்கும் வரை.சுவையான ஊறுகாய் தயார் .

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website