இட்லி ,தோசைக்கு ஏற்ப கம கமக்கும் பீர்க்கங்காய் துவையல் செய்து பாருங்கள் …!!
பீர்க்கங்காய் துவையல் தென்னிந்தியாவின் புகழ்பெற்ற துவையல் வகை. இது இட்லி தோசை மற்றும் சூடான சாதத்துடன் சுவையாக இருக்கும். பீர்க்கங்காய் ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்ட காய்கறி வகையாகும். பீர்க்கங்காய் சட்னி வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை எடுத்துக் கொள்வது உடல் நலத்திற்கு மிகுந்த நன்மை சேர்க்கும். அவசரத்திற்கு மிகவும் சிம்பிளான செய்ய வேண்டும் என்றால் தக்காளி, வெங்காயத்தை எப்படி சுவையான தக்காளி சட்னி செய்து கொடுக்கலாம். வாருங்கள் இவை இரண்டு டிஷ்ஷையும் எப்படி செய்ய வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
பீர்க்கங்காய் – 1
கடலைப்பருப்பு – 2 ஸ்பூன்
உளுத்தம்பருப்பு – 2 ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 5
புளி – சிறிய கோலி குண்டு அளவு
தேங்காய் – 4 ஸ்பூன்
பெருங்காயம் – சிறிதளவு
உப்பு – 3/4 ஸ்பூன்
எண்ணெய் – 1 ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை – தேவையான அளவு.
செய்முறை:
ஒரு வாணலியில் எண்ணெய் சூடானதும் கடலைப்பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் வறுக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய பீர்க்கங்காய் சேர்த்து வதக்கவும். பின்னர் பொடியாக நறுக்கிய பீர்க்கங்காய் சேர்த்து வதக்கவும்பின்னர் கால் கப் அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 5 முதல் 7 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
பீர்க்கங்காய் வெந்ததும் துருவிய தேங்காய் சேர்த்து கலக்கவும். பின்னர் கலவையை நன்கு ஆற வைக்கவும். ஆறிய பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து மென்மையாக அரைத்து எடுக்கவும். அதனுடன் கடுகு கருவேப்பிலை தாளித்து கலந்து சூடான சாதம் அல்லது தோசை, இட்லியுடன் பரிமாறலாம்.