இதய நோயாளிகள் க்ரீன் டீ குடிக்க கூடாது…

May 19, 2023 at 10:22 am
pc

க்ரீன் டீ குடிப்பது உடலுக்கு நன்மை விளைவிக்கும் என்று அனைவருக்கும் தெரியும். ஆனால், எதுவுமே அளவுக்கு மீறிச் சென்றால் அது ஆபத்தில்தான் முடியும் என்பது உண்மையே. மருத்துவர்களின் கூற்றுப்படி ஒரு சில உடல் நிலைக்கு க்ரீன் டீயை தவிர்ப்பது நன்மையளிக்கும் என்பதாகும். சரி இனி யார் யாரெல்லாம் க்ரீன் டீயைத் தவிர்க்க வேண்டும் என்று பார்ப்போம்…

இதய நோயாளிகள், கல்லீரல் பாதிப்பு உள்ளவர்கள், பதட்ட நோய் உள்ளவர்கள், ரத்தப்போக்கு பிரச்சினை உள்ளவர்கள் க்ரீன் டீயை தவிர்த்தல் நல்லது.

இரும்புச்சத்து குறைபாடு, ரத்த சோகை உள்ளவர்கள் க்ரீன் டீ குடிப்பதை தவிர்த்தல் நல்லது. இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு க்ரீன் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இது உள் உறுப்புக்களின் வளர்ச்சியை பாதிக்கும்.

ஜீரணப் பிரச்சினை உள்ளவர்கள் க்ரீன் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இதில் இருக்கும் டானின் என்ற மூலக்கூறு நெஞ்செரிச்சல், வாந்தி உணர்வு, வயிற்று வலி என்பவற்றை உண்டாக்கும்.

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் க்ரீன் டீ குடிப்பதை தவிர்க்க வேண்டும். ஏனென்றால், இதிலிருக்கும் காபின், காட்ஸின், டானின் போன்ற மூலக்கூறுகள் கர்ப்பிணிகளுக்கும் கருவில் இருக்கும் குழந்தைகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

க்ரீன் டீயானது கண்களின் அழுத்தத்தை அதிகரிப்பதால், கண் பிரச்சினை உள்ளவர்கள் இதை பருகக்கூடாது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website