இதற்கு கூட பணம் கொடுக்க வேண்டுமா? நடிகை பிரியாமணி !
இதற்கு கூட பணம் கொடுக்க வேண்டுமா என்று விஷயம் தெரிந்து நான் மிகவும் ஆச்சரியமடைந்தேன் என்று பிரபல நடிகை ப்ரியாமணி தெரிவித்துள்ளார்.
பிரபல நடிகர், நடிகைகள் மற்றும் திரை உலக பிரபலங்கள் வெளியே செல்லும்போது அவர்களை சுற்றி ஒரு கூட்டம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுப்பதை பார்த்து வருகிறோம். அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரல் ஆகும் என்பதும் அதனால் அந்த குறிப்பிட்ட நடிகர் நடிகைகளுக்கு நல்ல விளம்பரம் கிடைக்கும் என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் நடிகர் நடிகைகளை குறிவைத்து புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுப்பவர்களை Paparazziகள் என்று கூறுவார்கள். இந்நிலையில் இது குறித்த ஒரு தகவலை பேட்டி ஒன்றில் நடிகை பிரியாமணி கூறியுள்ளார். அதில் ’பாலிவுட் நடிகர்கள், நடிகைகள் ஏர்போர்ட், ஜிம், வாக்கிங் என எங்கு சென்றாலும் அவர்களை வளைத்து வளைத்து புகைப்படக்காரர்கள் புகைப்படம் எடுக்கிறார்கள்.
என்னை ஏன் யாரும் புகைப்படம் எடுப்பதில்லை என்று நண்பர் ஒருவரிடம் கேட்டபோது அதற்கு Paparazziகளுக்கு பணம் கொடுக்க வேண்டும் என்று கூறினார். அப்போதுதான் இது போன்ற விஷயங்களுக்கு நாம் எங்கு செல்கிறோம் என்ற தகவலையும், அவர்கள் கேட்கும் தொகையையும் கொடுக்க வேண்டும் என்பதை தெரிந்து கொண்டேன். அது தவறு என நான் கூறவில்லை, ஆனால் விஷயம் தெரிந்த போது எனக்கு ஆச்சரியமாக இருந்தது என்று கூறியுள்ளார்
இதனை அடுத்து Paparazziகள் நடிகர் நடிகைகளை விரட்டி விரட்டி புகைப்படம் எடுப்பது முன்கூட்டியே பணம் கொடுத்து செய்யப்படும் செட்டப் என்று தற்போது தெரியவந்துள்ளது.