இதுவரை 5 பேரை கொன்றுள்ளோம்; பாஜக நிர்வாகி பகீர்!
ராஜஸ்தான்: பாஜக முன்னாள் எம்எல்ஏ கியான் தேவ், “இறைச்சிகாக பசுக்களை கடத்திய 5 பேரை நாங்கள் கொன்றுள்ளோம். பசுவதையில் ஈடுபடும் நபர்கள் யாராக இருந்தாலும் அவர்களை கொலை செய்யுங்கள், நான் ஜாமீன் எடுத்து தருகிறேன்” என்று பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் இது குறித்து விளக்கம் அளித்துள்ள கியான் தேவ், ‘இஸ்லாமியர்களை முதலமைச்சர் அசோக் கெலாட் பாதுகாக்கிறார். பசுக் கடத்தல் செய்பவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும் என நான் எனது தொண்டர்களிடம் கூறியுள்ளேன். ஒருவேளை அவர்கள் தப்பிக்க முயன்றால் அவர்களை அடித்து போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். சட்டத்தை என் கையில் எடுக்க மாட்டேன்” என தெரிவித்துள்ளார்.