இத்தனை கோடிகளா? பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க ஒரே அடியா சம்பளத்தை உயர்த்திய நடிகர்!
பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக பிரபல நடிகர் சம்பளத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக்பாஸ்
பிக்பிரதர் நிகழ்ச்சியை அடிப்படையாக கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் முதலில் இந்தியாவில் இந்தி மொழியில் தான் தொடங்கப்பட்டது. இதனை இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து நாட்டின் பல்வேறு மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது.
சல்மான் கான்
இந்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சி இதுவரை 15 சீசன்களை நிறைவு செய்துள்ளது. விரைவில் பிக்பாஸ் சீசன் 16 நிகழ்ச்சி தொடங்கவுள்ளது. இதில் 10க்கும் மேற்பட்ட சீசன்களை நடிகர் சல்மான் கான் தான் தொகுத்து வழங்கியுள்ளார். கடந்த சீசன் வரை அவர்தான் தொகுத்து வழங்கினார்.
டிஆர்பி எகிறும்
சல்மான் கான் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் ஸ்டைல், போட்டியாளர்களிடம் நடந்து கொள்ளும் விதம், அறிவுரை கூறுவது, அன்பாக பேசுவது, அதிரடி காட்டுவது என அவர் நிகழ்ச்சியை கொண்டு செல்லும் ஸ்டைலுக்கு என்றே பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. சல்மான் கான் வரும் வார இறுதி எபிசோடுகள், டிஆர்பி ரேட்டிங்கில் எகிறும்.
அதிர்ச்சி வைத்தியம்
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 16க்கான சம்பளத்தை சல்மான் கான் பல மடங்கு உயர்த்தி நிகழ்ச்சி குழுவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார்.கடந்த சீசனில் 350 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார் சல்மான் கான். இந்நிலையில் 16வது சீசனுக்கு அதைவிட 3 மடங்கு அதிகமாக அதாவது, 1050 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளாராம்.
திணறி போன டீம்
பெரிய அமொவுண்ட் என்பதால் நிகழ்ச்சி குழு என்ன செய்வதென்று தெரியாமல் திணறி போயுள்ளதாம். பிக்பாஸ் 16வது சீசனுக்கான ப்ரீ ப்ரடெக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் மாத தொடக்கத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என கூறப்படுகிறது. அதற்குள் கேட்ட சம்பளத்தை கொடுத்து சல்மான் கானையே நிகழ்ச்சி குழு தக்க வைத்துக்கொள்ளுமா அல்லது ஆளை மாற்றுமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.