இந்தியாவில் மீண்டும் உருவெடுக்கும் கொரோனா!

December 18, 2023 at 10:34 am
pc

இந்திய மாநிலமான கேரளாவில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையானது ஆயிரத்தை தாண்டியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆயிரத்தை தாண்டிய கொரோனா தொற்றாளர்கள் மாநிலத்தில் இதுவரை 1324 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில், 77 வயதுடைய ஒருவரும் 82 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

மேலும் வயதானவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என மாநில சுகாதாரத்துறை அறிவுறுத்தி உள்ளது.

அதிக காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் மற்றும் மார்பு நெரிசல் போன்ற அறிகுறிகளை வைத்து மருத்துவமனை வரும் நோயாளிகளுக்கே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளார்கள்.

ஆகவே இது போன்ற அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என மாநில சுகாதாரத்துறை அறிவுறித்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website