இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டி; 288 ரன் வெற்றி இலக்கை நிர்ணயித்தது இந்தியா!!

December 15, 2019 at 6:15 pm
pc

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் இடையே முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன், பவுலிங் செய்ய தீர்மானித்தார். முதலில் பேட்டிங் செய்த இந்திய, தொடக்க ஆட்டக்காரர்களான ரோஹித் சர்மா, KL ராகுல் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை சமாளிக்க தடுமாறினர். ராகுல் 6 ரன் எடுத்து வெளியேறினார், ரோஹித் 36, கோலி 4 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தனர். அடுத்து வந்த ஷ்ரேயஸ் ஐயர் – ரிஷப் பண்ட் ஜோடி நிதானமாக ரன் குவிக்க ஆரம்பித்தனர். இவர்கள் ஜோடி 114 ரன் சேர்த்தனர். ஷ்ரேயஸ் ஐயர் 88 பந்துகளில் 70 ரன் குவித்தார். ரிஷப் பண்ட் 71 ரன் குவித்தார். அவரை தொடர்ந்து களமிறங்கிய கேதர் 40, ரவீந்தர் ஜடேஜா 21, சிவம் 9, தீபக் சஹர் 7 என்ற ரன் கணக்கில் முதல் இன்னிங்ஸ் நிறைவேறியது.

இந்தியா 50 ஓவர் முடிவில் இந்தியா 287 எடுத்து 8 விக்கெட் இழந்து வெஸ்ட் இண்டிஸ்க்கு 288 ரன் இலக்கை நிர்ணயித்துள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website