இந்திய அணியை தோற்கடித்த இங்கிலாந்து!!ரசிகர்கள் வருத்தம் …
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது அரையிறுதி போட்டியில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
அவுஸ்திரேலியாவின் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் இரண்டாவது டி20 உலக கோப்பையின் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியின் துடுப்பாட்டம்
முதலில் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்களான கே.எல் ராகுல் மட்டும் ரோகித் சர்மா ஜோடி சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர், பின்னர் வந்த நட்சத்திர வீரர் சூர்ய குமார் யாதவும் வெறும் 14 ஓட்டங்களில் வெளியேறி இந்திய அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி தந்தனர்.
சரிவில் இருந்து மீட்ட விராட் கோலி
இந்திய அணியின் விக்கெட்கள் ஒருபுறம் மலமலவென சரிந்தாலும், மறுமுனையில் இந்திய அணியின் நட்சத்திர நாயகன் விராட் கோலி தனது நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டார்.
40 பந்துகளை எதிர்கொண்ட விராட் கோலி 4 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 50 ஓட்டங்கள் எடுத்து இருந்த போது கிறிஸ் ஜோர்டான் பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஹர்திக் பாண்டியா அதிரடி
விராட் கோலி ஒருமுனையில் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும், அணிக்கான சிறப்பான கூடுதல் ஓட்டங்களை பெற சிறிது அதிரடியாக விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
முதல்15 பந்துகளில் வெறும் 20 ஓட்டங்களுக்கு உள்ளாகவே சேர்த்து இருந்த ஹர்திக் பாண்டியா, அடுத்த 15 பந்துகளில் மைதானத்தில் சிக்சரும் பவுண்டரியும் பறக்க விட்டார்.
வெறும் 33 பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட ஹர்திக் பாண்டியா 4 பவுண்டரிகள், 5 சிக்சர்கள் என விளாசி 63 ஓட்டங்கள் அணிக்காக சேர்த்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 168 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இதையடுத்து 169 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணிதங்களது இரண்டாவது பாதியை எதிர்கொள்ள உள்ளனர்.