இந்திய அணி அபார வெற்றி… ஒரு நாள் தொடரையும் கைப்பற்றியது.!

October 11, 2022 at 6:40 pm
pc

இந்தியாவுக்கு எதிராக தென் ஆப்பிரிக்க சுற்று பயணத்தின் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தென் ஆப்பிரிக்கா அணி 27.1 ஓவர்களில் 99 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக க்ளாஸென் 34 ரன்கள் எடுத்தார். இந்திய அணி தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்களையும், சுந்தர், சிராஜ், ஷபாஸ் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது. 

100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.1 ஓவர்களில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 105 ரன்கள் எடுத்து தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரையும் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website