இந்த நோய் உள்ளவர்கள் பால் குடித்தால் உயிருக்கே ஆபத்தாம்..உஷார் மக்களே ..!!

March 13, 2023 at 6:56 am
pc

நமது உடலுக்கு தேவையான பல முக்கிய உணவுகளில் பால் ஒரு அத்தியாவசியமான பானமாக விளங்கி வருகின்றது. பாலில் நமது உடலுக்குத் தேவையான பல நல்ல கூறுகள் உள்ளன. ஆனால் சமீப காலமாக பால் குடித்தாதால் உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் என்று கூறப்படுகின்றது.

பொதுவாக பாலில் இருக்கும் லாக்டோஸை ஜீரணிப்பதில் சிலருக்கு சிரமம் இருக்கிறது என்ற ஒரு கருத்து உள்ளது. மனித உடல் தானாகவே லாக்டோஸை ஜீரணிக்கும் திறனை வளர்த்துக் கொள்கிறது.
எனினும் தொடர்ந்து பால் குடித்து வந்தால் நீரிழிவு நோய் ஏற்படக்கூடும் என்ற அச்சம் பலரிடம் நிலவி வருகிறது. பால் உண்மையில் நீரிழிவு நோய்க்கு கொண்டு செல்லுமா? வாங்க பார்க்கலாம்..

பசுவின் பால் 1 ஆம் வகை நீரிழிவு நோயுடன் தொடர்புடையது என்று கூறப்பட்டுள்ளது. பாலில் கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் டி, பொட்டாசியம், வைட்டமின் ஏ மற்றும் நியாசின் உள்ளிட்ட பல அத்தியாவசிய பொருட்கள் உள்ளன.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தினமும் இரண்டு கிளாஸ் அதாவது அரை லிட்டர் அல்லது அதற்கு அதிகமாக பால் குடிப்போருக்கு உடலில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும். குறிப்பாக இருதயத்தில் பிரச்சனை, அதோடு 44 சதவீதம் புற்றுநோய் வருவதற்கும் பால் ஒரு காரணமாக இருக்கிறது.

குறைவாக பால் குடிப்போரை விட அதிகமாக பால் குடிப்போர் மிக விரைவாக உயிர் இழப்பதாக ஆய்வில் வெளியாகியுள்ளது. பாலில் கலந்திருக்கும் லக்டோஸ் மற்றும் கிளாக்டோஸ் என்ற பொருட்களின் சர்க்கரை தன்மை அதிகரிப்பதால் உயிர் இழக்கும் அபாயம் உள்ளது.

பால் அதிகமாக குடிக்கும்போது நம் உடல் உறுப்புக்களில் வீக்கம், செரிமானப்பிரச்சனை, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்படும். இதனால் வயிற்றில் வாயு பிரச்சனை உருவாக வாய்ப்புள்ளது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website