இந்த பிரச்சனை இருக்குறவங்க தெரியாம கூட மாதுளம் பழத்தை தொடாதிங்க … உஷாரா இருங்க…!!

பொதுவாக உடலில் ஆரோக்கியத்தை மேம்படுத்த பழங்களை சாப்பிடுவது வழக்கம். அதிலும் அதிகளவு மக்களால் சாப்பிடப்படும் முக்கியமான பழங்களில் ஒன்று மாதுளை. இப்பழத்தை சாப்பிடுவதால் உடலில் இரத்தத்தின் அளவு இயற்கையாக அதிகரிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல், உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதுடன், சருமத்திற்கும் புத்துணர்ச்சி தருகிறது. ஊட்டச்சத்து அதிகம் உள்ள மாதுளை பல நோய்களுக்கு அருமருந்தாக திகழ்கின்றது. இருப்பினும் இதனை ஒரு சிலர் எடுத்து கொள்வது ஆபத்தை ஏற்படுத்தும். அதன்படி யாரெல்லாம் மாதுளை பழத்தை சாப்பிட கூடாது என்பதை பார்க்கலாம்.
❖ உங்களுடைய சருமத்தில் ஏதேனும் பிரச்சனை இருந்தால், மாதுளை பழத்தை சாப்பிடவே கூடாது. ஏனெனில், இந்த பழம் உட்கொள்வதால் உங்களுடைய சருமத்தில் சிவப்பு தடிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
❖ குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் மாதுளம் பழத்தை சாப்பிடவே கூடாது. ஏனென்றால் இதில் குறிப்பிட்ட அளவை விட அதிகளவு சர்க்கரை நிறைந்துள்ளது. சர்க்கரை அதிகம் இருக்கும் உணவுகளை எடுத்துக் கொண்டால் விளைவுகள் எப்படி இருக்கும் என்று உங்களுக்கே தெரியும்.
❖ இருமல் பிரச்சனை அல்லது சளி பிடித்திருக்கும் நேரத்தில் மாதுளம் பழம் சாப்பிட கூடாது. இதனால் தொற்றுநோய் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால், இருமல், சளி அதிகமாகலாம்.
❖ அமிலத்தன்மை பிரச்சனை இருப்பவர்கள் மாதுளம் பழம் சாப்பிடக் கூடாது. ஏனென்றால், மாதுளையின் குளிர்ச்சியான தாக்கத்தால், வயிற்றில் உணவு சரியாக ஜீரணமாகாது. இதனால் பிற பிரச்சனைகளை ஏற்படவும் வாய்ப்புள்ளது.
❖ எடையை குறைக்க விரும்புவோர் கட்டாயம் மாதுளையை சாப்பிட கூடாது. ஏனென்றால் இதில் அதிகமான அளவு கலோரிகள் இருக்கின்றன. இதனால் எடை குறைப்பில் எதிர்மறை விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.
❖ குறைந்த இரத்த அழுத்தம் பிரச்சனை இருப்பவர்கள் மாதுளை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.