இந்த மீனில் இப்படியும் செய்யலாமா?சமைச்சி பார்க்கலாம் வாங்க …!!
அசைவத்தில் பொதுவாகவே அனைவரும் எடுக்கக் கூடியது மீன், கறி மட்டுமே. ஆனால் மீனில் கனவா மீனில் செய்து பாருங்கள் ருசி நாக்கிலே நிக்கும். எனவே புதிதாக கனவா மீனை வைத்து கனவா பிரட்டலை செய்து பாருங்கள். கீழ் காணும் பொருட்களை வைத்து எப்படி செய்வதென்று பார்க்கும் வாருங்கள்.
தேவையான பொருட்கள்
கணவாய் மீன் – 1/4 கிலோ
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
பொட்டுக்கடலை மாவு – 2 கைப்பிடி அளவு
கருவேப்பிலை – ஒரு கொத்து
சின்ன வெங்காயம் – 2 கைப்பிடி அளவு
பச்சை மிளகாய் – 6
எண்ணெய் – ஒரு குழிகரண்டி அளவு
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை பழம் – 1 (சாறு எடுக்கவும்)
மிளகுத்தூள் – 2 டீஸ்பூன்
செய்முறை
மீனை சுத்தம் செய்து வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். இதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள், இஞ்சி பூண்டு விழுது, உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து ஐந்து நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
இதை பொட்டுக்கடலை மாவில் புரட்டி எடுத்து தவாயில் சிறிது எண்ணெய் விட்டு, இரண்டு நிமிடம் இருபுறமும் வேகவிட்டு எடுக்கவும். 2 நிமிடத்திற்கு மேல் வேக வைத்தால் ரப்பர் போல் ஆகிவிடும்.
கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி கருவேப்பிலை, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். இதில் மீன் சேர்த்து லேசாக வதக்கி விட்டு சிறிது உப்பு, எலுமிச்சை சாறு பிழிந்து அடுப்பை அணைக்கவும். பரிமாறும் முன்பு மிளகுத்தூள் தூவி பரிமாறவும்.