இந்த ரெண்டே பொருட்கள் மட்டும் போதும் …உங்கள் முகம் வெள்ளையாக இத பண்ணுங்க…!!

June 10, 2022 at 1:12 pm
pc

பொலிவான சருமத்திற்கு:

வெயில் மற்றும் எண்ணெய் பண்டங்களை அதிகளவில் சாப்பிடுவது போன்றவற்றால் எப்படிபட்ட வறண்ட சருமமாக இருந்தாலும் எண்ணெய் பசை இருக்கும். அதுவும், வெயில் காலத்தில் முகத்தில் போடும் கிரீம் வெள்ளையாக அப்படியே பளிச்சென்று தெரியும் பெண்களின் முக அழகையே கெடுத்துவிடும். எனவே, வெயில் காலங்களில் கிரீம்களை பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக, சில விட்டு வைத்தியங்களை செய்யலாம். இது உங்கள் முகத்தில் எண்ணெய் பசையை நீக்கி பளபளப்பாக வைத்துக் கொள்ளும். இதற்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றுங்கள்

2 ஸ்பூன் தேன் 1 ஸ்பூன் ஓட்ஸ் பவுடர், மற்றும் தேவையான அளவு மோர் ஊற்றி, நன்றாக கலக்கி கொள்ளவும். பின்னர், அந்த பேஸ்டை முகத்தில் பேக் போட்டு 20 நிமிடங்கள் கழித்து முகத்தை குளிர்ந்த நீரில் கழுவினால், முகத்தில் இருக்கும் அழுக்கும், எண்ணெய் பசை நீங்கி, முகம் பொலிவாக இருக்கும்.

ஓட்ஸ் பவுடர்: நீங்களே தயாரிக்கலாம், சிறிதளவு ஓட்ஸை எடுத்து மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும். ஓட்ஸ் பவுடர் ரெடி!

உடல் முழுவதும் வெள்ளையாக:

உடலில் ஆடை மறைக்காத பகுதி என்றால், கையும் காலும் தான். இதனால், வெயில் பட்டு கருப்பாக தெரியும். இதை போக்க எளிமையான இயற்கை முறையில் ஒரு வீட்டு வைத்தியம்..

அரிசி மாவு 2 ஸ்பூன், பாதாம் பவுடர் 2 ஸ்பூன், தேவையான அளவு தேன் தேர்த்து, நன்றாக கலக்கி பேஸ்ட் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். குளிக்கும் போது சோப்பு போட்டு முதலில் குளித்து விட்டு, பின்னர் இந்த பேஸ்ட்டை உடல் முழுவதும் தடவி மசாஜ் செய்து குளித்தால் மேனி கண்ணாடி போல ஜொலிக்கும். இதை முகத்திற்கும் ஃபேஸ் பேக் போட்டுக் கொள்ளலாம். முகமும் பளபளப்பாக இருக்கும். முயற்சித்துப் பாருங்கள் நிச்சயம் பயன் தரும்.

குறிப்பு: இந்த குறிப்புகள் எல்லாம் இயற்கையானவை, எனவே எந்த பிரச்சனையும் இருக்காது. தாராளமாக பயன்படுத்தலாம்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website