இந்த ஷாம்பு யூஸ் பண்ணாதவங்க உடனே ட்ரை பண்ணி பாருங்க, உங்க முடி மட்டும் இல்ல நீங்களும் சைன் ஆகிடுவீங்க…!!

முடி வளர நாம் தலைக்கு பயன்படுத்தும் எந்த ஷாம்புவாக இருந்தாலும் அதில் கட்டாயம் நமக்கு தீங்கு விளைவிக்கும் கெமிக்கல் இருக்கத் தான் செய்யும். கொஞ்சமும் கெமிக்கல் இல்லாமல் இயற்கையான முறையில் தலைக்கு ஒரு ஷாம்புவாக மட்டும் இல்லாமல் முடி உதிராமல், பொடுகு, வராமல், முடி அடர்த்தியாக ,நீளமாக, வளர அதுமட்டும் இல்லாமல் பொடுகு தொல்லையால் ஏற்படும் முகத்தில் ஏற்படும் பிரச்னை கூட சரியாக என்று இத்தனை நன்மைகளையும் சேர்த்து தரக்கூடிய ஒரு இயற்கையான ஷாம்புவை பற்றி தெரிந்து கொள்வதற்கான பதிவு தான் இது.
இயற்கையான இந்த ஷாம்பூவை தயாரிக்க நமக்கு தேவை கற்றாழை, ஒரு கைப்பிடி வேப்பிலை, இரண்டு டேபிள் ஸ்பூன் கருஞ்சீரகம், 10 செம்பருத்தி இலை, 10 செம்பருத்தி பூ, இவையெல்லாம் அரைக்க தண்ணீருக்கு பதிலாக அரிசி களைந்த தண்ணீர்.
கற்றாழையை மேல் தோல் நீக்கி உள்ளிருக்கும் ஜல்லை நன்றாக சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள் (ஒரு பெரிய மடல் கற்றாழை எடுத்தால் சரியாக இருக்கும்). இத்துடன் கருஞ்சீரகம், வேப்பிலை, செம்பருத்தி இலை, செம்பருத்தி பூ அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து அரிசியை கழுவிய தண்ணீரை ஊற்றி அரைத்து கொள்ளுங்கள்.(அரிசியை பத்து நிமிடம் ஊற வைத்த பிறகு கழுவிய அந்த அரிசியை தண்ணீரை பயன்படுத்திக் கொள்ளுங்கள்). இப்போது இதை நல்ல பைன் பேஸ்ட் ஆக அரைத்து கொள்ளுங்கள்.
இந்த பேஸ்டை ஒரு பவுலில் மாற்றி ஒரு டேபிள் ஸ்பூன் பாதாம் எண்ணெய் சேர்த்துக் கொள்ளுங்கள். அது இல்லாத பட்சத்தில் சுத்தமான தேங்காய் எண்ணெயும் சேர்த்துக் கொள்ளலாம். ஷாம்பூக்கு பதிலாக தலைக்கு இதை தேய்த்து குளித்தால் முடி வழு வழுப்பாக பட்டு நூல் போல் அவ்வளவு சைனான இருக்கும்.
அது மட்டும் இன்றி இதில் சேர்த்து இருக்கும் ஒவ்வொரு பொருளும் முடி வளர்ச்சிக்கு அத்தனை நல்லது. ஆலுவேரா முடி வளர்ச்சி தூண்டக் கூடியது. கருஞ்சீரகமும், வேப்ப இலையும், நம் தலையின் வேர்க் கால்களில் இருக்கும் முடி வளர்ச்சியை தடுக்கும் கிருமிகளை அழிக்கும் சக்தி கொண்டது. அது மட்டுமின்றி வேப்பிலை தலையில் பேன், பொடுகு, ஈறு போன்றவை வராமல் தடுக்கும்.
செம்பருத்தி பூவும், இலையும், முடியை நன்கு மிருதுவாக்கி பட்டு போல ஆக்கும். இதில் சேர்த்திருக்கும் அரிசி கலைந்த தண்ணீர் முடியை நன்கு வளர செய்யும், பாதாம் எண்ணையும் அது போல தான் அது இல்லாத பட்சத்தில் சேர்க்கும் தேங்காய் எண்ணெயும் இதையே செய்யும்.
இதை வாரம் இரண்டு முறை தேய்த்து குளித்துதால் உங்களுக்கே இதனுடைய பலன் தெரியும். கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்தும் அந்த நேரத்திற்கு முடி எண்ணெய் பிசுக்கு இல்லாமல் இருப்பது போல் தோன்று ஆனால் அது உங்கள் தலைமுடிக்கால் அனைத்தையும் வறட்சி அடைய செய்து கெமிக்கலும் உள்ளே சென்று கெடுதலை உண்டு பண்ணும்.
இந்த பேக்கை தேய்த்த உடனே உங்களுக்கு தலை குளிர்ச்சி ஆவதை நன்றாக உணர முடியும் தலை உஷ்ணத்தை குறைத்தாலே முடி வளர்ச்சி அதிகமாகும். அது மட்டுமின்றி இதில் சேர்த்து இருக்கும் அனைத்துமே முடி வளர்ச்சி அதிகப்படுத்தக்கூடிய பொருட்கள் தான்.
நமக்காக கொஞ்சம் நேரத்தை செலவழித்து இது போன்ற விஷயங்களில் உங்கள் கவனத்தை செலுத்தினால் இயற்கையான முறையில் ஆரோக்கியமாக நீண்ட கருகரு கூந்தலை பெற முடியும். நீங்களும் முடி வளர்ச்சிக்கான இந்த அழகு குறிப்பை பயன்படுத்தி பாருங்கள்.