இனி ‘அந்த’ காட்சிகளில் நடிக்க மாட்டேன்: திருமதி நயன்தாரா…!

June 13, 2022 at 1:10 pm
pc

நயன்தாராவுக்கும், இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கும் மகாபலிபுரத்தில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் ஜூன் 9ம் தேதி திருமணம் நடந்தது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தான் தாலியை எடுத்துக் கொடுத்திருக்கிறார்.

திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணம் முடிந்த மறுநாளே நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.

இந்நிலையில் திருமணம் முடிந்த கையோடு நயன்தாரா புது கன்டிஷன் போடுவதாக கூறப்படுகிறது. அதாவது இனி படங்களில் ஹீரோக்களுடன் நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியிருக்கிறது.

நடிகைகள் திருமணானதும் முத்தக் காட்சிகள், படுக்கையறை காட்சிகளில் நடிக்க மாட்டேன் என்று சொல்வது புதிது அல்ல. இந்நிலையில் தான் நயன்தாராவும் அதையே கூறியிருக்கிறார்.

நயன்தாரா தற்போது கேரளாவில் இருக்கிறார். தன் குடும்பத்தாருடன் நேரம் செலவிட்ட பிறகு அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்து வரும் ஜவான் இந்தி படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார்.

அந்த படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகிறார் நயன்தாரா. இதற்கிடையே நயன்தாராவின் திருமண நிகழ்ச்சியில் ஷாருக்கான் கலந்து கொண்டார்.


Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website