இனி விளையாடமாட்டார் – சிஎஸ்கே அணிக்கு குட் பை சொல்லும் ஜடேஜா..?
ஐபிஎல் தொடரில் சென்னை அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா அறிவிக்கப்பட்டார். ஆனால் சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில் அவர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். எம்.எஸ்.தோனி மீண்டும் கேப்டனாக பொறுப்பேற்றார்.
தொடர்ந்து ஜடேஜாவை சென்னை அணி கட்டாயப்படுத்தி கேப்டன் பதவியில் இருந்து நீக்கியதாக கூறப்பட்டது. இந்தநிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சென்னை அணி தொடர்பான அனைத்து பதிவுகளையும் ரவீந்திர ஜடேஜா நீக்கியுள்ளார். குறிப்பாக கடந்த 2021 மற்றும் 2022 தொடர்பான அனைத்து பதிவுகளும் நீக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் இதையடுத்து சென்னை அணியுடன் அவருக்கு மனக்கசப்பு பகிரங்கமாகியுள்ளது. அதோடு அடுத்த ஆண்டு சென்னை அணியில் ஜடேஜா தொடரமாட்டார் என்பது 90% தற்போது உறுதியாகியுள்ளது.