இமானோட முன்னாள் மனைவி சொல்வது பொய்… நடந்தது இதுதான்.. சர்சையை கிளப்பிய பிரபலம்..
தமிழ் சினிமா பிரபலங்களிடையே தற்போது பரபரப்பாக பேசப்படும் டாப்பிக் தான் சிவகார்திகேயன் மற்றும் டி.இமானுக்கு இடையில் ஏற்பட்டுள்ள பிரச்சினை.
சிவகார்த்திகேயன் திரையுலகிற்கு அறிமுகமானது முதல் பல ஹிட் பாடல்களை வழங்கி அவரின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தவர்
அதுமட்டுமின்றி, சிவகார்த்திகேயனை வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் பாடகராகவும் அறிமுகம் செய்துள்ளார். இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளாக சிவகார்த்திகேயனும், இமானும் எந்த திரைப்படங்களிலும் இணைந்து பணியாற்றவில்லை.
இந்த ஜென்மத்தில்…
இதுகுறித்து யூடியூப் சேனல் ஒன்றில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இமான், ‘‘இந்த ஜென்மத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மீண்டும் பயணிக்கிறது கஷ்டம்.
வரும் காலங்களிலும் அவரது படங்களில் பணியாற்ற மாட்டேன். அவர் எனக்கு மிகப்பெரிய துரோகம் செய்துள்ளார். அதை என்னால் வெளியே சொல்ல முடியாது. வெளிப்படையாக சொன்னால் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கப்படும் என சர்ச்சையை கிளப்பபும் வகையில் பதிலளித்துள்ளார்.
இதையடுத்து சிவகார்த்திகேயனுக்கு ஆதரவாக டி.இமானின் முன்னாள் மனைவி மோனிகா ரிச்சர்ட் பேசியுள்ளார்.
இது குறித்து ஒரு ஊடகத்திற்கு போன் மூலமாக நேர்காணல் கொடுத்துள்ள அவர், சிவகார்த்திகேயன் ஒரு ஜெண்டில்மேன் என்றும் அவர் தன் குடும்பத்தில் விவாகரத்து குறித்த பிரச்சனை எழுந்த போது சமாதானம் செய்து வைக்க முயற்சித்ததாகவும் சிவகார்திகேயனுக்கு சார்பாக பேசியிருந்தார்.
குறித்த விவாகரத்து தொடர்பான விடயத்தில் டி.இமான் பக்கம் சிவகார்த்திகேயன் நிற்காததால் அதைத்தான் இமான் “துரோகம்” என்று குறிப்பிட்டுள்ளதாகவும் கூறினார். டி.இமான் பெண் எல்லாம் பார்த்துவிட்டுதான் தன்னிடம் வந்து விவாகரத்து கேட்டதாகவும் அவர் பேசியுள்ளார்.
இது தொடர்பில் குட்டி பத்மினி…
இந்நிலையில் பிரபல நடிகை குட்டி பத்மினி இமானின் மனைவி கூறுவதில் உண்மையில்லை என ஒரு நேர்காணலில் குறிப்பிட்டு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.
இவர் தமிழ் திரையுலகின் முன்னாள் கதாநாயகியாக இருந்தவர். இவர், இந்த விவகாரம் குறித்து ஒரு நேர்காணலில் பேசுகையில், டி.இமான் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தாங்கள் நெருங்கிய நண்பர்கள் என்றும், இமான் குறித்து அவரது முன்னாள் மனைவி மோனிகா ரிச்சரட் கூறிய விடத்தில் எந்தவித உண்மையும் இல்லை.
தனக்கும் மோனிகாவிற்கும் பிறந்த இரண்டு பெண் குழந்தைகளின் படிப்பு செலவுகளை இமான்தான் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், அவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டிய ஜீவனாம்ச தொகை சரியாக கொடுக்கப்படுவதாகவும் குட்டி பத்மினி கூறியுள்ளார்.
இதையெல்லாம் தன் வீட்டிற்கு இமான் மற்றும் அவரது தந்தை வந்திருந்த போது பகிர்ந்து கொண்டதாகவும் அவர் கூறியுள்ளார். இமான் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமிலீயா என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.
அவரை தங்களின் குடும்பம்தான் இமானிற்கு அறிமுகம் செய்து வைத்ததாகவும், விவாகரத்திற்கு பிறகுதான் அவர்கள் இருவரும் பழக ஆரம்பித்தாகவும் குட்டி பத்மினி குறித்த நேர்காணலின் போது தனது கருத்தை பகிர்ந்துள்ளார். இது தற்போது இணைய தளத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.