இரண்டு பெண்கள் நரபலி! துண்டு துண்டாக வெட்டி புதைத்த தம்பதி… பகீர் வேண்டுதல்

October 11, 2022 at 6:05 pm
pc

கேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட இரண்டு பெண்கள்.

தம்பதிகள் மேற்கொண்ட அதிர்ச்சி செயல்.

கேரளாவில் தமிழ்ப்பெண் உள்ளிட்ட இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் திருவில்லா பகுதியில் உள்ள லைலா மற்றும் பகவந்த் சிங் தம்பதிகள் செல்வம் பெருகி பணக்காரராக வாழ ஆசைப்பட்ட நிலையில் இதற்காக ஒரு முகவரிடம் தொடர்பு கொண்டு பெண்களை அழைத்து வந்து நரபலி கொடுக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த முகவர் கடந்த 27-ம் திகதி கொச்சி கடவந்திரா பகுதியில் இருந்து ஒரு பெண்ணை கடத்தி வந்து பலி கொடுத்துள்ளனர். கொச்சியில் லொட்டரி டிக்கெட் விற்று வந்த தமிழகத்தின் தர்மபுரியை சேர்ந்த பத்மாவை காணவில்லை என அந்த பெண்ணின் உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து கடந்த சிலதினங்களுக்கு பின்னர் துண்டுதுண்டாக வெட்டப்பட்ட அந்த பத்மாவின் உடலை பொலிசார் கண்டுபிடித்தனர். இதனை தொடர்ந்து தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.

இறந்த பத்மாவின் செல்போன் சிக்னலை பின்தொடர்ந்த போது அந்த செல்போன் முகவரிடம் இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த முகவரை கைது பொலிஅசர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் மருத்துவ தம்பதிகளுக்காக பெண்களை நரபலி கொடுத்தது தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து 3 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் காலடியை சேர்ந்த பெண்ணும் காணவில்லை என புகார் எழுந்தது. அதனை தொடர்ந்து நடைபெற்ற விசாரணையில் காலடியை சேர்ந்த ரோஸாலி மாயமான பெண்ணும் நரபலி கொடுக்கப்பட்டது தெரியவந்தது.

மேலும், நரபலி கொடுக்கப்பட்டு துண்டு துண்டாக வெட்டி திருவாழா நகரின் வெவ்வேறு இடங்களில் புதைக்கப்பட்ட 2 பெண்களின் உடல்களை தோண்டும் பணியை பொலிசார் தொடங்கியுள்ளனர்.

இதோடு கைதானவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website