இரண்டே நாளில் அசால்டா ரூ. 150 கோடி வசூலித்த பொன்னியின் செல்வன்..

October 2, 2022 at 12:44 pm
pc

மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வன் செப்டம்பர் 30ம் தேதி தியேட்டர்களில் ரிலீஸானது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான பொன்னியின் செல்வன் ரசிகர்களை கவர்ந்தது. பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்தவர்கள் விளாசுவது தனிக்கதை. ஆனால் பாக்ஸ் ஆபீஸில் வசூல் வேட்டை நடத்திக் கொண்டிருக்கிறது பொன்னியின் செல்வன்.

ரூ. 150 கோடி

பொன்னியின் செல்வன் படம் ரிலீஸான இரண்டே நாட்களில் உலக அளவில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கிறது. பொன்னியின் செல்வன் படம் ஓடும் தியேட்டர்களில் எல்லாம் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஒரு முறை படம் பார்த்தவர்கள் தயவு செய்து உடனே மீண்டும் பார்க்க டிக்கெட் எடுக்க வேண்டாம். டிக்கெட்டுக்காக பலர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என கோரிக்கை விடுக்கும் அளவுக்கு மவுசு இருக்கிறது.

முன்பதிவு

தமிழகத்தில் அடுத்த வார இறுதிநாட்களுக்கு கூட டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டுவிட்டதாக தியேட்டர் உரிமையாளர்கள் சிலர் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளனர். படம் சுமார், ஒரு வாட்டி பார்க்கலாம் என்று எழுந்த நெகட்டிவ் விமர்சனத்தையும் தாண்டி பொன்னியின் செல்வனை பெரிய திரையில் பார்க்க மக்கள் தியேட்டருக்கு சென்று கொண்டிருக்கிறார்கள்.

மீம்ஸ்

பொன்னியின் செல்வன் படம் பாக்ஸ் ஆபீஸில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிலையில் படத்தையும், மணிரத்னத்தையும் கலாய்த்து ஏகப்பட்ட மீம்ஸ் போட்டுள்ளனர். அதில் சிலவற்றை பார்த்தால் மணிரத்னமே குபீரென்று சிரித்து விடுவார். அந்த அளவுக்கு காமெடியாக இருக்கிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website