இரும்பு பாத்திரத்தில் இந்த உணவுகளை சமைக்க கூடாதாம்!
இரும்பு கடாயில் சமைத்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் பற்றி தெரிந்து கொள்வது அவசியம்.
முன்னைய காலத்திலிருந்தே இரும்பு பாத்திரங்களில் நம் முன்னோர்கள் சமைத்து வந்தார்கள்.
ஆனால் அவர்கள் ஒரு சில குறிப்பிட்ட உணவு வகைகளை இரும்பு பாத்திரங்களில் சமைப்பதில்லை.
காரணம் உலோகங்கள் எதிர்வினை தன்மை கொண்டவை .
அது சில சமயங்களில் உணவில் நச்சுத்தன்மையை கூட உருவாக்கிவிட வாய்ப்புகள் உள்ளது.
ஆகையால் எந்தெந்த உணவுகளை இரும்ப பாத்திரத்தில் சமைக்கலாம் ,சமைக்கக்கூடாது என அவசியம் தெரிந்துக்கொள்ளுங்கள்.
இரும்பு பாத்திரத்தில் கீரை சமைக்ககூடாது!
மேற்கூறியவாறு இரும்பானது எதிர்வினை புரியக்கூடியது.
கீரையில் காணப்படும் ஆக்ஸாலிக் எனும் அமிலம் இரும்போடு எதிர்வினை புரிந்து கீரையின் நிறத்தினையே மாற்றி அதன் சத்துக்களை இழக்க செய்துவிடும்.
இரும்பில் எலுமிச்சை பயன்படுத்தக்கூடாது!
எலுமிச்சை இயற்கையிலேயே அமிலத்தின் வீரியம் அதிகமாக கொண்டுள்ளது.
இது இரும்போடு சேரும்போது அது ஒருவிதமான கசப்பு தன்மையை உண்டாக்குகிறது.
இரும்பு பாத்திரத்தில் தக்காளி!
இரும்பு பாத்திரத்தில் தக்காளி சேர்க்கும் உணவுகளை தயாரிக்கக்கூடாது.
இது உடலுக்கு தீங்கான உலோக தாக்கங்களை ஏற்படுத்தும்.
இரும்பு பாத்திரங்களில் உணவு சமைப்பதால் ஏற்படும் பக்கவிளைவுகள்!என்னென்ன தெரியுமா?
இரும்பு பாத்திரத்தில் உணவு சமைப்பதால் உணவின் நிறம் கெட்டுப்போகும் வாய்ப்புகள் அதிகம் என்றாலும் நல்ல விஷயம் என்னவென்றால், பாத்திரங்களில் உள்ள இரும்பு நீங்கள் சமைக்கும் உணவை பலப்படுத்துகிறது.
இரும்பு பாத்திரத்தில் அதிக அமிலம் சேர்நத உணவுகளை சமைப்பதால் பாத்திரம் விரைவில் துருப்பிடிக்கும் அபாயத்தை அதிகரிக்கும்.
வார்ப்பிரும்பு கொண்டு சமைப்பதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் என்ன?
முதலாவது அது மிகவும் கனமானது.
அதனால் கைகளை தூக்கி வேலை செய்யும்போது அது நீங்கள் ஜிம்மில் செய்யக்கூடிய வேலைக்கு சமனாக இருக்கிறது.
இரண்டாவது குறைபாடு என்னவென்றால், வார்ப்பிரும்பு சமையல் பாத்திரங்கள் அடிக்கடி கழுவப்பட்டு முழுமையாக உலராமல் இருந்தால், அது துருப்பிடிக்கத் தொடங்கும்.
ஆகையால் அதனை மிகவும் கவனமாக உலறவைத்தால் துருப்பிடித்தலை தவிர்க்கலாம்.
வார்ப்பிரும்பு சமையல் பாத்திரங்களை மற்ற பாத்திரங்கைளை விட நீண்ட காலம் பாவிக்கமுடியும்.
சேதம் ஏற்பட சாத்தியங்கள் குறைவு ஆனால், ஒரு அடியில் விரிசல் ஏற்படக்கூடியது.
சரியான முறையில் சமைக்கும்போது உணவு தீய்ந்து போவதற்கான வாய்ப்புகள் குறைவு.
உணவு தீய்ந்து போகாமல் இருக்க சமைக்கத் தொடங்குவதற்கு முன், வார்ப்பிரும்பு சமையல் பாத்திரங்களை குறைந்தபட்சம் 3-5 நிமிடங்களுக்கு தீயில் நன்கு சூடாக்க வேண்டும்.
இவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் இரும்பு பாத்திரங்களில் பாதுகாப்பான மற்றும் சத்து இழப்பு எதுவுமின்றி உணவு தயாரிக்கலாம்.