இறந்தும் 9 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த சிறுமி!
கர்நாடக மாநிலம் சோமனாஹரியில் வசிக்கும் சுரேஷ் நாயக் மற்றும் லட்சுமி பாய் தம்பதியின் மகளான லக்ஷிதா, வாசவனஹரியில் உள்ள பொது பல்கலைக்கழகத்தில் படித்து வந்தார்.
கடந்த 18ம் தேதி லக்ஷிதா பல்கலைக்கழகம் செல்வதற்காக பஸ்சில் ஏறினார். அப்போது போது கீழே விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
பின்னர் அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் போது லக்ஷிதாவுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இதுகுறித்து அவரது பெற்றோருக்கு டாக்டர்கள் தெரிவித்தனர்.
உடனடியாக மகளின் உடல் உறுப்புகளை தானம் செய்வதாக கூறினர். இதையடுத்து லக்ஷிதாவின் உடலில் இருந்து கண்கள், இதயம், சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் உள்ளிட்ட 9 உறுப்புகள் அகற்றப்பட்டன.
பெங்களூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 9 வயது சிறுவனுக்கு ஹெலிகாப்டர் மூலம் இதயம் கொண்டு செல்லப்பட்டது.
மீதமுள்ள உறுப்புகள் உடுப்பி மணிப்பால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இறந்த ஒன்பது பேரை உயிர்ப்பித்த சிறுமியின் உடல் உறுப்பு தானத்தால் அனைவரும் குணமடைந்தனர்.