இறந்த மனைவியின் உடலை ஃப்ரீஸரில் வைத்திருந்த கணவர்: சகோதரரின் பரபரப்பு புகார்

July 3, 2023 at 11:23 pm
pc

இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தில், இறந்த தன் மனைவியின் உடலை கணவர் ஃப்ரீஸரில் வைத்திருந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து, அவர் தன் மனைவியைக் கொன்றிருக்கலாம் என உயிரிழந்த அந்தப் பெண்ணின் சகோதரர் பொலிசில் புகாரளித்துள்ளார்.

மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த Abhay Tiwari என்பவர், தன் சகோதரியான Sumitriயை, அவரது கணவரான Bharat Mishra கொன்றுவிட்டதாக பொலிசில் புகாரளித்துள்ளார்.

தன் தங்கை உயிரிழந்ததை உறவினர்கள் யாருக்கும் தெரிவிக்காமல், அவரது உடலை Bharat ஃப்ரீஸரில் வைத்திருந்தது தனக்கு இன்று காலை தெரியவந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

Bharat தன் மனைவியை அடிக்கும் வழக்கம் கொண்டவர் என்று கூறியுள்ள Abhay, அப்படி அவர் அடிக்கும்போது தன் சகோதரியான Sumitri உயிரிழந்திருக்கலாம் என்றும், அதை மறைத்து அவரது உடலை Bharat ஃப்ரீஸரில் வைத்திருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

மகனுக்காக காத்திருப்பதாக கூறும் கணவர்

ஆனால், தன் மனைவி வெள்ளிக்கிழமையன்று மஞ்சள் காமாலை நோயால் உயிரிழந்துவிட்டதாகவும், இறுதிச்சடங்குக்காக மும்பையில் வாழும் தன் மகன் வருவதற்காக தான் காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ள Bharat, அவர் வருவதற்காகத்தான் தான் தன் மனைவியின் உடலை ஃப்ரீஸரில் வைத்திருப்பதாகவும் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.

Sumitriயின் உடலைக் கைப்பற்றிய பொலிசார், அவர் எதனால் உயிரிழந்தார் என்பதைக் கண்டறிவதற்காக, அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பிவைத்துள்ளார்கள்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website