இலங்கையில் இன்று வெடித்த கலவரம்..!!மகிந்த ராஜபக்சே வீட்டுக்கு தீ வைப்பு – எம்.பிகள் வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டது..!

May 10, 2022 at 6:10 am
pc

இலங்கையில் இன்று வெடித்த கலவரத்தால் பெரும்பாலான இடங்களில் பதற்றம் அதிகரித்துள்ளது. இன்று மாலை மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்த நிலையில் அடுத்தடுத்து வெடித்தது மோதல்கள்.

இதனால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது அலுவலகங்கள் மீது போராட்டக்காரர்கள் கடும் தாக்குதல்.

இரவு மகிந்த ராஜபக்சே பூர்விக வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்ததால் மேலும் அந்நாட்டில் பதற்றம் அதிகரித்துள்ளது. 

யார் யார் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டுள்ளது என்பது பின்வருமாறு ;

1- சனத் நிஷாந்தவின் வீடுகள்

2- திஸ்ஸ குட்டி ஆராச்சியின் வீடு

3- குருணாகல் மேயரின் இல்லம்

4- ஜோன்ஸ்டனின் வீடு மற்றும் அலுவலகம்

5- மொரட்டுவ மேயர் சமன் லாலின் வீடு

6 – என் அனுஷா பாஸ்குவலின் வீடு

7- பிரசன்ன ரணதுங்கவின் வீடு

8- ரமேஷ் பத்திரனவின் வீடு

9- புனித் பண்டாராவின் வீடு

10- நீர்கொழும்பில் உள்ள ராஜபக்சர;களின் பெற்றோரின் கல்லறை

11-அவென்ரா கார்டன் ஹோட்டல்

12- அருந்திக்க பெர்னாண்டோவின் வீடு

13 – கனக ஹேரத்தின் வீடு

14- காமினி லொக்குகேவின் வீடு

15 – நிமல் லான்சாவின் 2 வீடுகள்

16- பந்துல குணவர்த்தனவின் வீடு

17 – அலி சப்ரி ரஹீமின் வீடு

18 – காஞ்சன விஜேசேகரவின் மாத்தறையில் அமைந்துள்ள வீடு

19 – ரோஹித அபேகுணவர்தவின் களுத்துறை அலுவலகம் 

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website