இளமை முதல் முதுமை வரை பெண்கள் கட்டாயமாக உண்ண வேண்டிய உன்னத உணவுகள்…!!
ஹார்மோன்கள், ஒருவரின் வாழ்க்கை மற்றும் ஆரோக்கியத்தில்,
முக்கியபங்கு வகிக்கின்றன. ஹார்மோன்களால்
ஏற்படும் பெரும்பாலான பிரச்சனைகளான
கர்ப்பப்பையின் உள்படலம் வெளிவளர்தல்,
மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம் மற்றும் சினைப்பை கட்டிகள் ஆகியவை ஈஸ்ட்ரோஜன் அதிகமாக சுரப்பதாலேயே
ஏற்படுகின்றன. எனவே, சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு, ஹார்மோன்களை எவ்வாறு சமநிலையில் வைத்துக் கொள்வது என்பதற்காக சில தகவல்கள்…
அதிக பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடவேண்டும்:
பழங்கள் மற்றும் காய்கறிகளில் நோய் எதிர்ப்புசக்தி நிறைந்து காணப்படுகிறது. தினமும், இரண்டு அல்லது மூன்று பழங்கள் சாப்பிடுவதோடு, சாலட்கள் மற்றும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ் மற்றும் பருப்புவகைகளை அதிகளவு சாப்பிடவேண்டும். இவை உடலில் சுரக்கும் அதிகப் படியான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை வெளியேற்ற உதவுகிறது.
இயற்கை உணவுகள்:
ரசாயன கலப்பின்றி இயற்கை முறையில் உருவாக்கப்படும் உணவுகள், உடலுக்கு சிறந்தது. இவற்றால், கல்லீரல் நன்கு செயல்பட்டு, அதிகப்படியான ஹார்மோன்களை வெளியேற்ற உதவுகிறது.
பைட்டோ ஈஸ்ட்ரோஜன் நிறைந்த உணவுகள்:
உணவுகளில் இயற்கையாக காணப்படும் பைட்டோ ஈஸ்ட்ரோஜன், பெண்களுக்கான ஹார்மோன்களை சமநிலைப் படுத்த உதவுகிறது. அனைத்து வகை பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகிய வற்றிலும், ஈஸ்ட்ரோஜன் காணப்படுகிறது. ஆனால், அவை “ ஐசோபிளாவின்’ என்ற வடிவி லேயே அதிக பலன் தருகிறது. இவை, சோயா மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது.
நல்ல கொழுப்பு நிறைந்த உணவுகள்:
ஒமீகா-3 கொழுப்பு நிறைந்த உணவுகளை முறையாக சாப்பிடவேண்டும். இவை, எண்ணெய் சத்து நிறைந்த மீன்கள், பாதாம், அக்ரூட் போன்ற பருப்பு வகைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும்
பூசணிக்காய் ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது. மாத விடாயின் போது ஏற்படும் வலியை தடுக்கும் தன்மை இந்த உணவுகளில் காணப்படுகிறது.
அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும்:
நமது உடல் 70 சதவீதம் தண்ணீரால் ஆனது. தண்ணீர் உடல் செயல்பாடு களுக்கு உதவுகின்றன. தினமும் 2.5 லி., முதல் 3 லி., வரை தண்ணீர் குடிக்கவேண்டும். மூலிகை டீ மற்றும் இளநீர் ஆகியவையும் குடிக்கலாம். டீ, காபி போன்ற காபின் நிறைந்த பானங்களை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. காபின், உடலில் ஹார்மோன் சம நிலையை
பராமரிக்கும் ஊட்டச் சத்தின் ஆற்றலை குறைக்கும்
வாய்ப்புள்ளது.
நார்ச்சத்து நிறைந்த உணவுகள்:
பெண்களுக்கான ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவ தில், நார்ச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களில் காணப்படும் நார் ச்சத்து, ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்கிறது. உடலில் காணப்படும் பழைய ஈஸ்ட்ரோஜனை வெளியேற்றும் நிகழ்வு, மற்ற பெண்ளோடு ஒப்பிடும்போது, அதிக நார்ச் சத்து நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிடும் பெண்க ளின் உடலில் மூன்று மடங்கு அதிகமாக செயல்படுகிறது.
சென்ஈஸ்ட்ரோஜன்களை’ தவிர்க்க வேண்டும்:
ஈஸ்ட்ரோஜன் போன்ற ரசாயனமான “சென் ஈஸ்ட்ரோஜன்கள்’ பூச்சி மருந்துகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் காணப்படுகின்றன. இவை, பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை தோற்றுவிக்கின்றன. உடல் எடை அதிகம் உடையவர்களுக்கு, இந்த ரசாயனம் அதிகளவு காணப்படும்.
தினமும் சத்தான உணவுகளை உட்கொண்டால் மருத்துவரிடம்போக வேண்டிய அவசியம் இருக்காது. ஆனால் பொதுவாக அனைவ ருக்கும் தெரிந்தது தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் போக வேண்டியது வராது எனக்கூறுவது உண்டு.
ஏனெனில், ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். ஆனால், இந்த விஷயத்தில் ஸ்ட்ராபெரிபழம் ஆப்பிளையே மிஞ்சும் என்பது புதிய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கொழுப்பு நிறைந்த உணவுகளான வெண்ணெய் மற்றும் இறைச்சி ஆகியவற்றை பிளாஸ்டிக் உறையில் சேமிப்பது, பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் உணவுகளை வைத்து, அவற்றை மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அதிகளவு கொழுப்பு நிறைந்த உணவுகளை
சாப்பிடும்போது, உடலில் அதிகளவு, “சென்ஈஸ்ட்ரோஜன்கள்’ சேருகின்றன
எ ன்பதை மறக்கக் கூடாது. எனவே, ஆரோக்கிய உணவு முறை மற்றும் உடற்பயிற்சியை பின்பற்றி ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.
வேதிப்பொருட்கள்:
இத்தாவரத்தின் கனி மற்றும் விதைகளில் புரதம் மற்றும் வைட்டமின் சி உள்ளன. விதைஎண்ணெயில் ஒலியிக், பால்மிடிக், ஸிட்டாரிக் அமிலங்கள் காணப்படுகின்றன. இலைகளில் சபோரின், வைடெக்ஸின் காணப் டுகின்றன. பட்டையில் பெரோநோன், பெரோநோ லைடு, டேரைகைன் போன்றவை காணப்படுகின்றன .
எலும்புகளை பலப்படுத்தும்:
விளாம்பழம் பல வியாதிகளை குணப்படுத்தும் சிறந்த பழமாகும். இதில் இரும்பு சத்தும், சுண்ணாம்புச்சத்தும், வைட்டமின் ஏ சத்தும் உள்ளது. இந்த பழத்தை அடிக்கடி சாப்பிட்டுவந்தால் எந்தவித நோயும் வராது.
ஆயுளை நீட்டிக்கச் செய்யும். சிறுவர்களுக்கு
அடிக்கடி விளாம்பழத்தை கொடுத்து வர அறிவு வளர்ச்சியடையும். ஞாபக சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
எலும்புகளுக்கு பலம் ஏற்படும். விளாம்பழம் ஜீரணக் கோளாறுகளை சரிசெய்யும். நல்ல பசி யை ஏற்படுத்தும். வயதானவர்கள் விளாம்பழம் உண்டு வந்தால் அவர்களுக்கு ஏற்படும் ஆஸ்டியோபெரோஸிஸ் என்னும் எலு ம்புகள் உடையக்கூடிய நோய் எட்டிப்பார்க்காது.
பற்கள் கெட்டிப்படும். நல்ல ஜீரணசக்தியைத் தரும். இரத்தத்தை விருத்தி செய்யும்.
இதயத்திற்கு இதமளிக்கும்:
இதயத்திற்கு நல்லபலத்தைதரும். நரம்புகளுக்கு வலிமை தரும்.
இருதயத்துடிப்பை இயற்கையின் அளவை மாறு படாமல் பாதுகாக்கும். அதிக சுண்ணாம்புச்சத்து நிறைந் துள்ள பழமாகும். ஒரு அவுன்ஸ் விளாம்பழத்தில் பி-2 உயிர்சத்து இருக்கிறது.
இந்த உயிர்சத்து நரம்புகளுக்கும், இதயத்திற்கும் பலமளி க்கும். ஜீரணக் கருவிகளை தக்க நிலையில் பாதுகாக்கும். அறிவுக்குப் பலம் தரும். மனசந்தோஷத்தையும், மனோதைரியத்தையும் அளிக்கும்.
பித்தம் போக்கும்:
பித்தத்தால் தலைவலி, கண்பார்வை மங்கல், காலையில் மஞ்சளாக வாந்தி எடுத்தல், சதா வாயில் கசப்பு, பித்த கிறு கிறுப்பு, கை கால்களில் அதிக வேர்வை, பித்தம் காரண மாக இளநரை, நாவில் ருசி உணர்வு அற்ற நிலை இவைக ளை விளாம் பழம் குணப்படுத்தும்.
இப்பழத்துடன் வெல்லம் சேர்த்து பிசைந்து 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் குணமா கும். சர்க்கரையுடன் விளாம் பழத்தைப் பிசைந்து ஜாம் போல் சாப்பிட, ஜீரண சக்தி அதிகரிக்கும். நன்கு பசிக்கும்.
தினசரி ஒரு பழம் வீதம் 21 தினங்களுக்கு சாப்பிட்டு வர எந்தவிதமான பித்த வியாதிகளும் குணமடையும். ஒரு வர் சாப்பிடும் விளாம்பழத்தை மற்றவருக்கு பங்கு தரக் கூடாது.
காரணம் விளாம்பழத்தில் உள்ள ஒரே ஒரு விதைக்கு மட் டுமே பித்தத்தைப் போக்கும் சக்திஉண்டு. அந்த குறிப்பி ட்ட விதை மற்றவருக்குப் போய்விட்டால், பித்தத்தைப் போக்க பழம் சாப்பிடுபவர் எதிர்பார்க்கும் பலனை அடைய முடியா து.
விளாம்பழத்திற்கு ரத்தத்தில் கலக்கும் நோய் அணு க்களை சாகடிக்கும் திறன் உண்டு. எனவே எந்த நோ யும் தாக்காமல் பாதுகாக்கும். அஜீரண குறைபா ட்டை போக்கி பசியை
உண்டுபண்ணும் ஆற்றலும் விளாம் பழத் திற்கு உண்டு. முதியவர்களின் பல் உறுதி இழப்பிற்கு விளாம்பழம் நல்ல மருந்து.
முகம் இளமையாக மாறும்:
வெயிலில் அதிகம் அலைவதால் முகத்தில் வறட்சியும் சுரு க்கங்களும் தோன்றும். சிலருக்கு வயதாக, வயதாக இந்த சுருக்கங்கள் அதிகரித்து மனதை வாட்டும். இதனை போக்க விளாம்பழம் சிறந்த மருந்தாகும்.
இரண்டு டீ ஸ்பூன் பசும்பாலுடன் இரண்டு டீ ஸ்பூன் விளாம் பழ விழுதைச் சேர்த்து நன்றாக அடித்து முகத்தி ல் ‘மாஸ்க்’ போல போட்டு சிறிது நேரம் கழித்து கழுவி விட்டால் முகம் இழந்த பொலிவு மீள்வதுடன் இன்னும் இளமையாக மாறும்.
விளாங்காயும் பாதாம்பருப்பும் தோலை மிருதுவாக்கும். பயத்தம்பருப்பு சருமத்தை சுத்தப்படுத்தும். விளாம்பழத் தின் சதைப் பகுதி யை தனியே எடுத்துக் காயவைத்து அதனுடன், பார்லி, கஸ்தூரி மஞ்சள், பூலான் கிழங்கு, காய்ந்த ரோஜா மொட்டு ஆகியவற்றை சம அளவு எடு த்து குளியல் பவுடராக பயன்படுத்தி வர, முரடு தட்டிய தோல் மிருதுவாவதுடன், கரும்புள்ளிகளும் காணாம ல் போகும்.
மரப்பட்டையைப் பொடித்து தண்ணீரில்போட்டு கொதிக்க வைக்கவும். இந்தகஷாயத்தை வடிகட்டிகுடிக்க, வறட்டு இருமல், மூச்சுஇழுப்பு, வாய் கசப்பு போன்றவை குணமாகும்.
பட்டுப்போன்ற கூந்தல்:
வறண்ட கூந்தல் இருப்பவர்களுக்கு அருமருந்து விளா ம்பழத்தின் ஓடு. இதை காய வைத்து உடைத்த விளா ம்பழ ஓட்டின் தூள் – 100 கிராம், சீயக் காய், வெந்தயம் – தலா கால் கிலோ இவற்றை அரைத்து, தலையில் தே ய்த்துக் குளித்து வர, பஞ்சாகப் பறந்த கூந்தல் படிந்து பட்டாகப் பளபள க்கும்.
செம்பருத்தி இலை, விளாம் இலை சம அளவு எடுத்து அரைத்துத் தலை க்குக் குளிக்க, மூலிகை குளியல் போல அற்புத வாசனையுடன் இருக்கும். எண்ணெய், சீயக்காய் எதுவும் தேவையில்லை. கூந்தலும் சூப்பர் சுத்த மாகிவிடும்.
தயிருடன் விளாம்காயை பச்சடிபோல் செய்து சாப்பிட வாய்ப்புண், அல்சர் குணமாகும். தசை வளர்ச்சி, உடல் வளர்ச்சிக்கான சத்தான பழ மான இந்த விளாம்பழம், ரத்தத்தை சுத்திகரித்து, ரத்தவிருத்தியும் செய்கிற சிறப் பை உடையது.
வெல்லத்துடன் விளாம்பழத்தை பிசறி சாப்பிட்டு வர நரம் புத் தளர்ச்சி விரைவில் குணமடையும். விளாம் மர இலை யை தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்துக் குடிக்க, வாயுத் தொல்லை நீங்கும்.
குங்குமப்பூக்களின் உள்ளே இருக்கும் நார்களையே குங்கு மப்பூ என்று அழைக்கப்படுகிறது. இது பசுமை கலந்த சிவப்பு நிறத்தில் காணப்படும். நறுமண முடையதா கவும் சிறிது கசப்பாகவும் இருக்கும். குங்குமப்பூ வைத் தண்ணீரில் கரைத் தால் ஆழ்ந்த மஞ்சள் நிறம் உண்டாகும்.
பரீட்சை காலமாக இருப்பதால் பெற்றோர்கள் தங்க ள் குழந்தைகளுக்கு வெண்டைக்காயை வதக்கி சாப் பிடக் கொடுப்பார்கள். மூளை சுறுசுறுப் பாய் செயல் பட வெண்டைக்காய் உதவிபுரியும் என்பதே இதற்குக் காரணம், இதில் உள்ள உயர்தரமான பாஸ்பரஸ் புத்திக்கூர்மையை அதிகரிக்கச் செய்கிறது! உயர்தரமான பாஸ்பரசுடன் ஒட்டிக் கொள்ளக் கூடிய ஒருவிதமான தாவர பசைப்பொருளும், நார்ப்பொருளும் வெண் டைக்காயில் உள்ளது; எளிதில் இரத்தத்தால் உட்கிரகிக்கப்பட்டு சக்தியா க மாறும் மாவுசத்தும் வெண்டைக்காயில்உள்ளன.
வெளியில் தலைகாட்டமுடியாத அளவிற்கு தகிக் கிறது வெப்பம். கோடை தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் சருமத் தை பாதுகாக்க சீரகத்தை காய்ச்சி குடிக்கலாம் என்று ஆலோசனை கூறியுள்ளனர் அழகியல் நிபுணர்கள். இதனால் சருமம் மங்காமல் செழுமையடையும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.