இஸ்லாமியர்களின் முக்கிய பண்டிகை – பக்ரீத் இன்று நாடு முழுவதும் பெரும் கொண்டாட்டம்
பக்ரீத் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அதிகாலையிலேயே மசூதிகளில் சிறப்பு தொழுகைகள் நடைபெற்றன.
பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படும் நிலையில், தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் சிறப்பு தொழுகைகளில் இஸ்லாமிய மக்கள் ஈடுபட்டனர். நாகூர் தர்காவிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது. தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் காயிதே மில்லத்திடலில் பக்ரீத் பண்டிகை முன்னிட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 2000 க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். பக்ரீத் பண்டிகையையொட்டி அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.