உங்கள் முடி பளபளன்னு அடர்த்தியா வளருமா? கறிவேப்பிலையை இந்த 4 வழிகளில் யூஸ் பண்ணுங்க போதும்…!!

December 19, 2022 at 7:16 am
pc
  • பொதுவாக பெண்கள் அழகான அடர்த்தியான பளபளப்பான முடியை தான் விரும்புவார்கள்.
  • ஆனால் இன்றைய சூழ்நிலையில் பலரும் முடி உதிர்தல், அடர்த்தி குறைவு, பொடுகு மற்றும் நரை முடி பிரச்சனை என பல்வேறு பிரச்சனைகளை தினமும் அனுபவித்து கொண்டு வருகின்றார்கள்.
  • அடத்தியான பளபளப்பான முடியை பெற ஒரு சில இயற்கை பொருட்கள் உதவுகின்றது.
  • குறிப்பாக அதில் முடி பராமரிப்பு என்று வரும்போது கறிவேப்பிலை முதன்மையானது. அடர்த்தியான முடி மற்றும் முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கும் பண்புகள் இதில் அதிகம் உள்ளது.
  • அந்தவகையில் அடர்த்தியான முடியைப் பெறவும் கறிவேப்பிலையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம் வாங்க.
  • ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை எடுத்து கெட்டியான பேஸ்டாக அரைத்து பிறகு ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலை விழுதை துருவிய தயிரில் மென்மையான நிலைத்தன்மை கொண்ட பேஸ்ட்டாக உருவாக்கும் வரை நன்கு கலக்கி இந்த கலவையை உங்கள் முடியில் பயன்படுத்துங்கள் மற்றும் உச்சந்தலையில் மசாஜ் செய்து பின்னர், 30 முதல் 40 நிமிடங்கள் வரை விட்டுவிட்டு ஷாம்பூ போட்டு கழுவவும்.
  • அரை கப் கறிவேப்பிலை மற்றும் வெந்தயத்தை எடுத்து அதனுடன் ஒரு நெல்லிக்காயை சேர்த்து நன்றாக பேஸ்டாக அரைத்து இதனை உச்சந்தலை முழுவதும் தடவி, 20 முதல் 30 நிமிடங்கள் வரை விடவும். பின்னர் சாதாரண அல்லது வெதுவெதுப்பான நீரில் முடியை நன்கு அலசி வந்தால் நல்ல பயன் கிடைக்கும்.
  • ஒரு கடாயை எடுத்து அதில் தேங்காய் எண்ணெயை ஊற்றி, அதில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை சேர்த்து கொள்ளவும். எண்ணெயை சூடாக்கி கறிவேப்பிலை சாறு எண்ணெயில் இறங்கியதும், தீயை அணைத்து கலவையை ஆற விடவும். குளிர்ந்த பிறகு, அதை வடிகட்டி, முடிக்கு தடவவுங்கள். இது உங்கள் முடியை கருப்பாக மாற்றும்.
  • 15-20 புதிய கறிவேப்பிலைகளை எடுத்து, இலைகளை ஒரு மிக்ஸியில் போட்டு மென்மையான பேஸ்ட்டை உருவாக்கவும். பிறகு அந்த விழுதில் வெங்காயச் சாறு சேர்க்கவும். இந்த பேஸ்ட்டை உங்கள் தலைமுடியில் சுமார் ஒரு மணி நேரம் வைத்திருங்கள். பின்னர், ஷாம்பூ போட்டு முடியை நன்கு அலச வேண்டும்.
Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website