உங்கள் வீட்டில் கரையான் தொல்லையா?..அப்படினா இந்த டிப்ஸ் உங்களுக்கு தான் ….!!

November 9, 2022 at 7:26 am
pc

நம்மில் பல வீடுகளிலும் நாம் சந்திக்கும் பெரிய பிரச்சனை தான் இந்த கரையான் தொல்லை. பார்ப்பதற்கு எறும்பு போல இருக்கும் இந்த கரையானுக்கு இறக்கைகள் இருக்கின்றது. இந்த கரையான்கள் வாழ்வதற்கு ஈரப்பதம் மற்றும் இருண்ட இடம் தேவை.

அதுபோன்ற சூழல் இருக்கும் நம் வீட்டு கதவு, ஜன்னல் போன்ற மரத்தால் செய்யப்பட்ட இடங்களில் இதை நாம் அதிகம் காணலாம். இது கொஞ்சம் கொஞ்சமாக வளர்ந்து அந்த இடங்களையே அழிக்கும் அளவிற்கு சென்றுவிடும். இதை நம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி அழிப்பது என்பதை இங்கு காண்போம்.

முதலில் நம் வீட்டின் தரைப் பகுதி மற்றும் வெளிப்புறம் ஆகியவற்றில் சிறு துவாரங்கள் கூட இல்லாமல் நாம் கவனிக்க வேண்டும். மேலும் வீட்டில் நாம் சேர்த்து வைத்திருக்கும் பழைய மர பொருட்களை முடிந்த அளவு கட்டுப்படுத்துவது நல்லது.

மிளகாய் தூளுக்கு கரையான்களை கட்டுப்படுத்தும் சக்தி உண்டு. இவற்றை மரச்சாமான்களின் மீது தூவி விட கரையான்கள் அழிந்து போவதை நம்மால் பார்க்க முடியும்.

வேப்பிலையை நன்றாக பொடி செய்து கரையான்களின் இது தூவி விட்டால் அந்த கசப்பின் காரணமாக கரையான்கள் அழிந்து விடும். அல்லது வேப்பிலையை நன்றாக அரைத்து அந்த தண்ணீரை தெளித்தாலே கரையான்கள் செத்து விடும்.

மேலும் தேங்காய் எண்ணெய், சூடம், பூண்டு இந்த மூன்றையும் பயன்படுத்தி கரையான்களை அழிக்க முடியும். முதலில் தேங்காய் எண்ணையை எடுத்து லேசாக சூடுபடுத்திக் கொள்ளவும். பிறகு அந்த எண்ணெயில் இரண்டு கட்டி சூடத்தை எடுத்து கரைத்து கொள்ளவும். அதில் பூண்டை நன்றாக நச்சு போடவும்.

இந்த மூன்றையும் நன்றாக மிக்ஸ் பண்ணி கரையான் இருக்கும் சுவர்களில். கதவு ஓரங்களில், மூலை முடுக்குகளில் எல்லாம் பிரஸ் வைத்து அதை அப்ளை பண்ண வேண்டும். சிறிது நாட்களில் கொஞ்சம் கொஞ்சமாக கரையான் காணாமல் போய்விடும்.

பிறகு உங்கள் வீட்டு கதவுகளிலும், சுவர்களிலும் கரையான் தொல்லை இருக்கவே இருக்காது. இது இல்லத்தரசிகளுக்கானா சூப்பர் டிப்ஸ். இதை உங்கள் வீடுகளில் செய்து பார்த்து மகிழ்ச்சி அடையவும்.


Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website