உங்க உடல் எடையை குறைக்க வேண்டுமா – இந்த ஒரு இல்லை போதும்.
உடல் எடையைக் குறைப்பவர்களுக்கு பிரிஞ்சி இலை விரைவில் பலன்களைத் தரும். பிரிஞ்சி இலையை தேஜ் பட்டை, பிரியாணி இலை என பல பெயர்களில் அழைக்கின்றனர். பிரிஞ்சி இலையை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் பல்வேறு நன்மைகளைப் பெற முடியும். மிக மெதுலாக ஸ்லோ குக்கிங்கில் சமைக்கப்படும் நிறைய உணவுகளில், புலாவ், பிரியாணி, சூப் போன்றவற்றில் நாம் பிரிஞ்சி இலையை வாசனைக்காக சேர்க்கிறோம்.
இவை உணவிற்கு நல்ல அரோமாவைக் கொடுக்கின்றன. அதேசமயம் எடை கூடிக்கொண்டே போகிறது என்று வருத்தப்படுபவர்களுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும்.
பிரிஞ்சி இலை நீர்
ஒரு பாத்திரத்தில் ஒன்றரை லிட்டர் அளவுக்கு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க வேண்டும்.
இதில் ஒரு கைப்பிடி அளவுக்கு (10 -15) இலைகளைச் சேர்த்து நன்கு கொதிக்க வைக்க வேண்டும்.
2 நிமிடங்கள் நன்கு கலக்கி விட்டு, அடுப்பை அணைத்துவிட வேண்டும்.
பின் அந்த நீரை வடிகட்டி ஆற விடுங்கள். கொஞ்சம் வெதுவெதுப்பாக இருக்கும்போது சிறிது தேன் சேர்த்து டீ போலவும் குடிக்கலாம்.
அவ்வப்போது லேசாக சூடேற்றி வெதுவெதுப்பாகவும் குடிக்கலாம்.
ஆற வைத்து விட்டு தண்ணீர் தாகம் எடுக்கும்போது இந்த நீரை குடித்து வரலாம். இது வேகமாக உடல் எடையைக் குறைப்பதற்கு உதவி செய்யும்.