உங்க குழந்தையும் கலரா இருக்கனுமா…? அப்போ இதை செய்து பாருங்கள் ….!!
எல்லா தாய்மார்களுக்கும் ஒரே ஆசை தான் தன்னுடைய குழந்தையும் மற்ற குழந்தைகளை போல கலராக இருக்க வேண்டும் என்று. குழந்தைகள் என்றாலே அழகு தான். பொதுவாக பிறக்கும் அனைத்து குழந்தைகளும் கலராக தான் பிறக்கிறார்கள். ஆனால், வளர வளர அவர்களுடைய சருமம் கருப்பாக ஆரம்பிக்கிறது. இதற்காக பல விதமான டானிக் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.
இருந்தாலும் இயற்கை முறையில் குழந்தையின் சருமத்தை வெள்ளையாக்க முடியும். வெள்ளையாவதோடு மட்டுமல்லாமல் மிருதுவாகவும் ஆரோக்கியமாவும் இருக்கும். அதற்கு நீங்க செய்ய வேண்டியது எல்லாம் ஒரு சில எளிய வழிமுறைகள் தான். இதை தொடர்ந்து பின்பற்றி வந்தாலே போதுமானது. குழந்தைகளின் சருமம் பெரியவர்களின் சருமத்தை போல் கிடையாது. எனவே, கவனத்தோடு இருக்க வேண்டும்.
குழந்தையின் நிறத்தை அதிகரிக்கும் சூப்பர் டிப்ஸ்:
டிப்ஸ்: 1
❖ ஒரு பவுலில் 4-5 ஸ்பூன் கடலை மாவு, 2 ஸ்பூன் பாலாடை, 11/2 ஸ்பூன் அளவிற்கு காய்ச்சாத பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளுங்கள்.
❖ அதன்பின், குழந்தையை குளிக்க வைப்பதற்கு முன்பு குழந்தையின் உடல் முழுவதும் சிறிதளவு தேங்காய் எண்ணெயை தடவி விடுங்கள்.
❖ 10 நிமிடங்கள் கழித்து நாம் கலந்து வைத்திருந்த கடலை மாவு கலவையை குழந்தையின் உடல் முழுவதும் நன்றாக தேய்த்து மசாஜ் செய்து 5 நிமிடம் கழித்து குளிக்க வையுங்கள்.
❖ அதற்கு அப்புறம் பேபி சோப் போட்டு குளிக்க வைத்துவிடுங்கள்.
❖ இதை தொடர்ந்து தினமும் பின்பற்றினால் குழந்தையின் நிறத்தில் மாற்றம் ஏற்படும். பின்னாளில் உங்களுடைய குழந்தையும் கலராக இருக்கும்.
டிப்ஸ்: 2
❖ 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள், சந்தனப் பொடி 1 டீஸ்பூன், சிறிதளவு பால் ஆகியவற்றை எடுத்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
❖ இந்த பேஸ்டை குழந்தையின் உடல் முழுவதும் தடவி 10-15 நிமிடங்கள் வரை வைத்திருந்து பின்னர் பேபி சோப்பு போட்டு குளிப்பாட்டவும்.
❖ இதை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் குழந்தையின் சரும ஈரப்பதத்துடனும், மென்மையாகவும், வெள்ளையாகும் இருக்கும்.