உச்சகட்ட மகிழ்ச்சியில் லெஜண்ட் சரவணன்!!ரூ. 45 கோடிக்கு விற்பனையான லெஜண்ட் சாட்டிலைட் உரிமம், ஓடிடி உரிமை..
இந்த ரணகளத்திலும் லெஜண்ட் சரவணனால் மட்டுமே இப்படி செய்ய முடியும் என்கிறார்கள் சினிமா ரசிகர்கள்.
சரவணன் அருள்
தன் கடை விளம்பர படங்களில் நடித்தே பலரின் கவனத்தையும் ஈர்த்தவர் சரவணன் அருள். இந்நிலையில் தான் நானே ராஜா மாதிரி இருக்கிறேன், ஹீரோவாக ஏன் நடிக்கக் கூடாது என்று ஒரு சுபயோக சுபதினத்தில் ஹீரோவாகவிட்டார். ஜேடி-ஜெர்ரி இயக்கிய தி லெஜண்ட் படத்தை தயாரித்து, ஹீரோவாக நடித்தார் சரவணன் அருள்.
தி லெஜண்ட்
நயன்தாராவை தனக்கு ஜோடியாக நடிக்க வைக்க முயன்று தோல்வி அடைந்தார் சரவணன் அருள். இதையடுத்து பாலிவுட் நடிகை ஊர்வசி ரவ்தெலாவை கோலிவுட்டுக்கு அழைத்து வந்தார். படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் மீம்ஸ் போட்டு கலாய்த்தது தனிக் கதை. லெஜண்டின் முகத்தில் ஒரு எக்ஸ்பிரஷனும் இல்லை என்றார்கள்.
நன்றி
லெஜண்ட் படத்திற்கு மோசமான விமர்சனம் எழுந்தபோதிலும் அதன் சாட்டிலைட் உரிமம், ஓடிடி உரிமை ஆகியவை ரூ. 45 கோடிக்கு விற்பனையானதாக தகவல் வெளியானது. இந்நிலையில் தான் மாலையும், கழுத்துமாக நிற்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு, வெற்றி நாயகனாக்கிய மக்களுக்கு மனமார்ந்த நன்றி… என தெரிவித்துள்ளார்.