உச்சிமாநாட்டில் கலந்துகொண்டது உண்மையான புடின் இல்லையா? – வெளிவரும் பகீர் பின்னணி!

July 24, 2022 at 8:41 am
pc

ஈரானின் தெஹ்ரானில் இந்த வரம் நடைப்பெற்ற உச்சிமாநாட்டில் உருவத் தோற்றம் கொண்ட போலியான புடினை ரஷ்ய ஜனாதிபதி அணுப்பி வைத்திருக்கலாம் உக்ரைன் சந்தேகம் எழுப்பியுள்ளது. தரையிறங்கிய விமானத்தில் இருந்து வெளியேறிய புடின், அவருக்கான கம்பீரமின்றி படியிறங்கி வந்துள்ளதாக கூறுகின்றனர். மட்டுமின்றி, வழக்கத்துக்கு மாறாக, அவரிடம் ஒரு அவசரம் மற்றும் பதற்றம் காணப்பட்டதாகவும் கூறுகின்றனர்.

மேலும், வரவேற்க காத்திருந்த அதிகாரிகளிடம் ஒரு நாடகத்தன்மையுடன் நடந்து கொண்டதாகவும், துரிதமாகவே தமக்கான வாகனத்தில் ஏறிச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பில் உக்ரைன் உளவுத்துறை தலைவர் முன்வைத்த கேள்வியில், ரஷ்ய ஜனாதிபதிக்கான விமானத்தில் இருந்து அவர் படியிறங்குவதை கவனியுங்கள், உண்மையில் நாம் பார்த்து பழகிய விளாடிமிர் புடின் தானா என சந்தேகம் எழுகிறது என தெரிவித்துள்ளார்.

ஈரான் மற்றும் துருக்கி ஜனாதிபதிகள் கலந்துகொண்ட அந்த உச்சிமாநாட்டில் விளாடிமிர் புடின் தமது போலியை அனுப்பி வைத்துள்ளார் என்பதே உண்மை என உக்ரைன் உளவுத்துறை தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, விளாடிமிர் புடினை நேரிடையாக சந்திக்க நேரம் ஒதுக்கிவிட்டு, 45 நொடிகள் தாமதாக துருக்கி ஜனாதிபதி எர்டோகன் சென்றுள்ளார் எனவும், புடின் முதன்முறையாக கால்கடுக்க காத்திருந்த சம்பவத்தையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதில் புடின் முகத்தில் காணப்பட்ட மாறுதல்கள், உண்மையில் அவமானத்தின் உச்சம் என குறிப்பிட்டுள்ளார். உண்மையான புடின் என்றால், அவ்வாறு கால்கடுக்க காத்திருக்க வைத்திருக்க மாட்டார்கள் எனவும் உக்ரைன் உளவுத்துறை தலைவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் பொதுவெளியில் உருவத் தோற்றம் கொண்ட போலியான புடினை களமிறக்கும் திட்டம் முன்வைக்கப்பட்டதாக புடின் தெரிவித்திருந்தார். ஆனால், அவ்வாறான திட்டம் தற்போது செல்லுபடியாகாது என தாம் நிரகரித்ததாகவும் புடின் வெளிப்படுத்தியிருந்தார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website