உடலின் பலவித பிரச்சனைகளுக்கும் இந்த ஒரே விதை போதும்..!!

December 30, 2022 at 7:50 am
pc

உடலின் இரும்புச் சத்தை அதிகரிக்க, ஹீமோகுளோபினை அதிகரிக்க, ரத்த சோகையை தடுக்க எந்த ஒரு உணவையும் தேடிப் போக வேண்டிய அவசியம் இல்லை இந்த ஒரே ஒரு விதை மட்டும் போதும். நமக்கு இருக்கக்கூடிய எல்லா பிரச்சனைகளுக்கும் ஒரு நிரந்தர தீர்வு தரும்.பொதுவாக பெண்களுக்கு ஏற்படக்கூடிய கர்ப்பப்பை சம்பந்தமான பிரச்சனைகள் அனைத்தும் தீர்க்கும். உடல் எடை குறைய, மற்றும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தாராளமாக இதை பயன்படுத்தலாம்.

இந்த விதையின் பெயர் சாலியா விதைகள் அல்லது ஹலீம் சீட்ஸ். நமக்கு நாட்டு மருந்து கடைகளில் இந்த விதைகள் தாராளமாக கிடைக்கும். ஆன்லைனிலும் கிடைக்கும் ஆன்லைனில் ஹலீம் சீட் என்று தேர்வு செய்ய வேண்டும்.பார்ப்பதற்கு கருப்பு எள்ளு போல் தோற்றமளிக்க கூடிய இந்த சாலியா விதையில் விட்டமின் ஏ பி, சி மற்றும் இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதச்சத்து அதிகம் உள்ளது.


ஒரு கப்பில் இரண்டு ஸ்பூன் சாலிய விதைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிகமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஒரு ஸ்பூன் சாலியா விதையில் 12 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது. இதை நன்றாக அலசி நீர் விடவும். இது எட்டு மணி நேரம் நன்றாக ஊறவும். இரவு படுக்க முன் ஊற வைத்தால் நன்று. இது காலையில் எடுக்கும் பொழுது ஒரு ஜெல் போன்ற தோற்றத்தை கொடுக்கும். விதைகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு ஜெல் போன்ற தோற்றத்தை அளிக்கும். அடுத்து பாதாமும் கற்கண்டும் சேர்த்து அரைத்த பவுடர் ஒரு ஸ்பூன் எடுத்துக் கொள்ள வேண்டும்.


ஒரு கப் பாலை எடுத்துக்கொண்டு பாத்திரத்தில் வைத்து நன்றாக சூடு படுத்தவும். பால் ஒரு கொதி வந்ததும் அதில் ஊற வைத்த ஜாலியா விதைகளை தண்ணீருடன் சேர்க்கவும். நன்றாக வேக வேண்டும். ஓரளவு நன்றாக வெந்ததும் அதில் பாதமும் கற்கண்டும் சேர்த்து அரைத்த பவுடர் ஒரு டேபிள் ஸ்பூன் சேர்க்க வேண்டும். அடுத்து சுக்கு பொடி ஒரு கால் ஸ்பூன் சேர்க்க வேண்டும். நன்றாக கொதித்து ஒரு பேஸ்ட் பதத்திற்கு அதாவது கஞ்சி போல் வந்ததும் இறக்கி வேறு ஒரு பவுலில் மாற்றவும்.


இதை உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் காலை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். இதனால் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை சீக்கிரத்தில் கரைத்து விடும். ஏனெனில் இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது மேலும் மலச்சிக்கல் பிரச்சனையையும் சரி செய்யும். வயிறு நிரம்பிய ஒரு உணர்வைத் தரும். தேவையற்ற அதிகம் சாப்பிட வேண்டும் என்று எண்ணத்தை தடுக்கும். அதிகளவு புரதச்சத்து இருப்பதால் தசைகளை நன்றாக பராமரிக்கும். இயற்கையான ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்க இதை தாராளமாக பயன்படுத்தலாம்.


அடுத்து இதில் அதிக அளவு ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உள்ளன. மேலும் விட்டமின் இ ஏ சி மற்றும் போலிக் அமிலம் உள்ளது. சளி காய்ச்சல், தொண்டைப்புண், ஆகியவற்றை சரி செய்யும். சாலியா விதையில் உள்ள நார்ச்சத்து குடல் இயக்கங்களை சரி செய்யும் குடலில் உள்ள புண்களை ஆற்றும். மேலும் மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனையை சரி செய்யும்.


இதில் அதிக அளவு இரும்பு சத்து மற்றும் புரதச்சத்து இருப்பதால் தாய்ப்பால் உற்பத்தியை தூண்டும். கை கால் வலி, உடல் சோர்வு, கால்சியம் மற்றும் இரும்பு சத்தினால் அவதிப்படுபவர்கள் இதை எடுத்துக் கொண்டால் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரித்து ,உடலில் ஹீமோகுளோபின் எண்ணிக்கையையும் அதிகரித்து ரத்த சோகை நோயை விரட்டும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website