உடலுக்கு அதிக வலிமையை தருகின்ற அமுக்கிறா கிழங்கின் அதிசய பயன்கள்…!!
அமுக்குறா கிழங்கை பாலில் வேகவைத்து வெயிலில் உலர்த்தி இதை இடித்து பொடி செய்து கொண்டு இதன் எடைக்கு நான்கில் ஒரு பங்கு இதனோடு நெய்யில் வறுத்து பொடியாக செய்த கருவேலன் பிசின் பொடியை இதனுடன் ஒன்றாக கலந்து இந்த பொடியில் மூன்று கிராம் எடுத்து பால் பாதி தண்ணீர் பாதியாக காய்ச்சி ஆறிய பசும்பாலில் இதை சேர்த்துகாலை மாலை இருவேளையும் தொடர்ந்து நாற்பது நாட்கள் பருகி வர உடலுக்கு உறுதி உண்டாகும்
அமுக்குறா கிழங்கை பாலில் வேகவைத்து பொடி செய்து இதை பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் கை கால் நடுக்கம் மற்றும் நரம்பு தளர்ச்சி வாத நோயால் ஏற்படும் உடல் வலி தூக்கமின்மை வயது முதிர்வால் ஏற்படும் களைப்பு மற்றும் உடல் அசதி உடல் பலவீனம் போன்ற பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமையும் இது உறுதி
அமுக்குறா கிழங்கு பொடியுடன் நெய் சேர்த்து சாப்பிட்டு வர உடலுக்கு உறுதியும் உடலுக்கு அழகும் ஏற்படும் ஆயுள் முழுவதும் ஆரோக்கியமாக வாழ இது ஒரு அற்புத மருந்தாக அமையும்
பொதுவாக அமுக்குறா கிழங்கிற்கு மனதிற்கு உற்சாகத்தையும் உடலுக்கு ஊட்டத்தையும் தருகின்ற ஒரு ஆற்றல் அதிகமாக இருக்கின்றது என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்
அமுக்கிரா கிழங்கை பச்சையாக பால்விட்டரைத்து இதை கொதிக்க வைத்து இடுப்பு வலி மற்றும் மூட்டு வீக்கம் மூட்டு வலிகளுக்கு இதை மேல்பூச்சாக பூசி வர உடல் சார்ந்த வழிகள் வீக்கம் இவைகளமுழுமையாககுணமாகும்அமுக்குறாகிழங்கை பால்விட்டு அரைத்து அக்கி மற்றும் கண்டமாலை மேலும் சிலந்தி நோய் இவைகளுக்கும் பற்றுப்போட மேற்சொன்ன நோய்கள் அனைத்தும் வெகு எளிதாக குணமாகும்.
அமுக்குறா கிழங்குடன் சமமாக தோல் நீக்கிய சுக்கை சேர்த்து வெந்நீர் விட்டு அரைத்து வீக்கம் மற்றும் வலிகளுக்கு பற்றாகப் போட்டு வர வீக்கத்தை கரைத்து வலிகளை நீக்கி உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் ஏற்படுத்தும்அமுக்கறா கிழங்கு மொத்தத்தில் ஆரோக்கிய வாழ்விற்கு இது விருந்து