உடலுக்கு தெம்பு தரும் நவதானிய புட்டு ….!!
நவதானியங்களில் ஒன்று தான். கொள்ளு மற்றும் கம்பு. பலருக்கு கம்பு கொண்டு கஞ்சி தான் செய்யத் தெரியும். ஆனால் கம்பு கொண்டு அட்டகாசமான சுவையில் புட்டு செய்யலாம் என்பது தெரியுமா? ஆம், கம்பு புட்டு செய்வது மிகவும் ஈஸி மட்டுமின்றி, குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடும் வண்ணம் இருக்கும்.
உடல் ஆரோக்கியத்திற்கு தினமும் சிறுதானிய உணவுகளை சேர்த்து கொள்வது நல்லது. இன்று கொள்ளு, கம்பு சேர்த்து புட்டு செய்வது எப்படி என்று பார்க்கலாம் …..
தேவையான பொருட்கள் :
கம்பு – ஒரு கப்
கொள்ளு – கால் கப்
சுக்கு – 2 (தேவைகேற்ப )
உப்பு – தேவைகேற்ப (ஒரு சிட்டிகை)
நெய் – ஒரு தேகரண்டி
ஏலக்காய் தூள் – அரை டீஸ்பூன்
சர்க்கரை – தேவைகேற்ப
தேங்காய் துருவல் – கால் கப்
முந்திரி – ஒரு டீஸ்பூன்
திராட்சை – ஒரு டீஸ்பூன்
பிஸ்தா – ஒரு டீஸ்பூன்
தேங்காய் துருவல் – 1 கப்
செய்முறை :
கம்பு மற்றும் கொள்ளுவை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆற வைக்கவும்.கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, திராட்சை, பிஸ்தா போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து கொள்ளவும்.ஆறியதும் மிக்சியில் போட்டு அதனுடன் சுக்கு சேர்த்து கொரகொரப்பாக பொடித்துக் கொள்ளவும்.
பொடித்த மாவுடன் உப்பு சேர்த்த தண்ணீர் தெளித்து பிசையவும். பிடித்தால் உருண்டையாகவும், உடைத்தால் உடையும் பதம் வரும் வரை பிசையவும்.மாவை புட்டு குழலில் வைத்து இடை இடையே தேங்காய் துருவல் சேர்த்து ஆவியில் 10 நிமிடம் வேக வைத்து எடுக்கவும்.
பிறகு, அதில் ஏலக்காய் தூள், நெய் சிறிதளவு, தேங்காய் துருவல், சர்க்கரை, நெய்யில் வறுத்த முந்திரி, திராட்சை, பிஸ்தா ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.சுவையான கொள்ளு – கம்பு புட்டு தயார்.
குறிப்பு
சர்க்கரை பதில் நாட்டு சர்க்கரை சேர்க்கலாம் .