உடலுறவின் போது அந்தரங்க பகுதியில் அதிக வலியா? உயிரை பறிக்கும் அபாயம்! பெண்கள் கட்டாயம் தெரிஞ்சிக்கோங்க…

May 27, 2022 at 11:17 am
pc

உறவின் போது வலி

பெண்கள் மெனோபாஸை எட்டும் காலத்தில் இயற்கையாகவே உடலுறவில் நாட்டம் இல்லாதது மட்டுமின்றி, பெண் உறுப்பும் வறட்சியாக இருக்கும் இக்காலத்தில் கருப்பை வாய் தொற்று ஏதேனும் இருந்தால் அது மேலும் மோசமான உடல் உபாதை மன அழுத்தத்தை உண்டாக்கும். உடலுறவின் போது கடுமையான வலி உண்டாக கூடும்.

உடலுறவுக்கு பின்பு உதிரப்போக்கு வெளிப்படலாம். கர்ப்பபையில் கட்டி. அல்லது கருப்பை வாயில் தொற்று இருந்தாலும் கூட உடலுறவுக்கு பின்பு உதிரப்போக்கு இருக்கலாம்.

வெள்ளைப்படுதல்

பெண்களுக்கு வெள்ளைப்படுதலும் உதிரபோக்கும் இயல்பானது தான். பெண். ஆனால் அசாதாரணமான நாற்றத்துடன் வெள்ளைப்படுதல், அது பச்சை நிறத்தில் இருப்பது, அதிக அரிப்பை சந்திப்பது போன்றவை எல்லாமே கருப்பை தொற்றுக்கான அறிகுறிகளாகவும் இருக்கலாம்.

வெள்ளைப்படுதல் அதிகமானால் கருப்பை தொற்று அல்ல. ஆனால் இதை அலட்சியம் செய்தால் அந்த தொற்று பெரிதாகி நாளடைவில் செல்களை பாதித்து புற்றுநோய் உருவாவதற்கு காரணமாகலாம். அதனால் வெள்ளைப்படுதல் அதிகமாகும் போது அலட்சியம் வேண்டாம்.

​பெண் உறுப்பில் எரிச்சல்

சிறுநீர் தொற்று வரும் போது யோனி பகுதியில் எரிச்சல் வருவது உண்டு. ஆனால் சிறுநீர் கழிக்காமல் இருக்கும் போதும் யோனி உறுப்பில் அரிப்பும் எரிச்சலும் இருந்தால் அதிலும் தொடர்ந்து நாள் கணக்கில் இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது அவசியம்.

இது சாதாரண கிருமித்தொற்றாக இருந்தால் நான்கு நாட்களில் சரியாகிவிடக்கூடும். கருப்பை வாய் புற்றூநோய் தொற்றாக இருந்தால் அரிப்பும் எரிச்சலும் அதிகமாகவும் தொடர்ந்தும் இருக்கும்.

சிறுநீர் கழித்தல்

பல பெண்களும் சிறுநீர்த்தொற்று பிரச்சனையை சந்தித்திருப்பார்கள். இதனால் சிறுநீர் அவசரமாக வெளியேறினால் அதற்கு காரணம் சிறுநீர் தொற்று தான் என்று ஒன்றை மட்டுமெ நினைக்கிறார்கள்.

ஆனால் அதிகமாக திரவ உணவுகள் எடுத்துகொள்ளாத நிலையிலும் அடிக்கடி சிறுநீர் கழிப்பது சிறுநீர் வேகமாக வருவது எல்லாமே தொடர்ந்து இருந்தால் அது கருப்பை வாய் புற்றுநோய் அருகில் இருக்கும் இடங்களிலும் பரவி இருக்கலாம் என்பதால் மருத்துவரை உடனே அணுகுவது நல்லது.

​தீவிரமான அறிகுறிகள்

கருப்பை வாய் சிறுநீரகம், மலக்குடல், யோனி மூன்றின் அருகே உள்ளது. இதனால் கருப்பை புற்றுநோய் பாதிப்பு அறிகுறிகளை கவனிக்காமல் விட்டால் சிறுநீர் கழிப்பதில் சிரமம், சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம், முதுகு வலி, கால்களில் வீக்கம், வயிற்றுப்போக்கு, மலக்குடல் வலி, அதிக சோர்வு, எடை இழப்பு, பசியின்ம, குமட்டல் வாந்தி போன்ற அறிகுறிகள் அதிகரிக்கலாம்.

மேற்கண்ட அறிகுறிகளில் ஒன்றை தொடர்ந்து கண்டாலும் தாமதிக்காமல் மருத்துவரை அணுகுவது நல்லது. அதே நேரம் இந்த அறிகுறிகள் இருந்தாலே அது புற்றுநோயாகத்தான் இருக்கும் என்று நினைக்காமல் மருத்துவரை அணுகி முறையான பரிசோதனை மேற்கொள்ளுங்கள்.

இதை தாண்டி ஆரோக்கியமாகவே இருந்தாலும் வருடம் ஒரு முறை பேப்ஸ்மியர் பரிசோதனை செய்து கொள்வது இன்னும் பாதுகாப்பானது

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website