உடலுறவின் போது உடைந்த ஆண்குறி நரம்பு: விரக்தியில் புதுமண தம்பதி எடுத்த விபரீத முடிவு!

June 5, 2022 at 6:27 am
pc

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த சக்திவேல் (22) என்பவருக்கும் ஆர்த்தி என்ற பெண்ணுக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடந்ததுள்ளது. இருவரும் சென்னை மதுரவாயலை அருகே தனலட்சுமி நகரில் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்றைய தினம் உறவினர்கள் செல்போனில் அழைத்தபோது இருவரும் எடுக்கவில்லை. மேலும் வீட்டின் கதவை தட்டியும் யாரும் திறக்காததால் சந்தேகமடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சக்திவேலின் வீட்டிற்கு வந்த போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, கணவன் மனைவி இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக இருந்துள்ளனர். அவர்களது உடல்களை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து போலீசார் நடத்திய சோதனையில், தற்கொலைக்கு முன்னர் அவர்கள் எழுதிய கடிதம் ஒன்று சிக்கியது. அந்த கடிதத்தில், “எனது ஆண்குறியின் நரம்பு உடைந்து போனதால் என்னால் குழந்தை பெற இயலாத காரணத்தால் நாங்களே எங்கள் சாவை தேடிக்கொள்கிறோம். இதில் யாருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என எழுதி இருந்தது.

போலீசார் நடத்திய விசாரணையில், தம்பதியர் மருத்துவமனையை ஏதும் அணுகாமல் இருந்து வந்துள்ளனர் என்றும், தங்களுக்கு குழந்தை பிறக்காது என தாங்களே முடிவு செய்து மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website