உடலுறவின் போது மாரடைப்பு; பரிதாபமாக உயிரிழந்த இளைஞர்!
உடலுறவின் போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக இளைஞர் பரிதாபமாக மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் தன் தோழியுடன் உடலுறவு கொள்ளும் போது திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இது குறித்து முதல்கட்ட விசாரணையில் இளைஞர் மது அருந்தி இருக்கலாம் எனவும், அவரது சட்டைப்பையில் இருந்து வயாகரா மாத்திரைகள் அதிகமாக கண்டெடுக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இது குறித்து உயிரிழந்த இளைஞருடன் உடலுறவு கொண்ட பெண் தோழியிடம் விசாரணை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.