உயிர் பிரியும் நேரத்திலும் கமலை சந்திக்க ஆசைப்பட்ட காதலி ஸ்ரீவித்யா!

March 7, 2024 at 8:24 pm
pc

மறைந்த நடிகை ஸ்ரீவித்யாவுக்கும், கமல்ஹாசனுக்கும் இடையேயான காதல் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார் இயக்குனர் சந்தானபாரதி. குணா குகையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் எதிர்பாராத வெற்றியை கொடுத்துள்ளது. 2006ம் ஆண்டு நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது, விரைவாக 100 கோடி ரூபாயை வசூலித்த படம் என்ற பெருமையையும் பெற்றுள்ளது.

இப்படத்தில் இயக்குனர் சந்தானபாரதி- நடிகர் கமல்ஹாசன் கூட்டணியில் உருவான குணா படமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பான நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்டிருந்த சந்தானபாரதியிடம் கமல்ஹாசன்- ஸ்ரீவித்யா இடையேயான காதல் தொடர்பான கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளிக்கையில், அவர்களது காதல் உண்மையானது, ஸ்ரீவித்யாவுக்கு கமல்ஹாசன் உதவியாக இருந்தார்.

ஆனால் வாழ்க்கையில் இவர்களால் ஒன்றிணைய முடியவில்லை, கடைசிவரைக்கும் ஸ்ரீவித்யாவின் வாழ்க்கை சரியாக அமையவில்லை.

கடைசி நாட்களில்கூட கமல்ஹாசனை மட்டும் சந்திக்க ஆசைப்பட்டார், கமல்ஹாசனும் ஸ்ரீவித்யாவை சென்று பார்த்தார், இவர்களது காதல் நிறைவேறாது என்று தெரிந்து கமல் மிகவும் சிரமப்பட்டார் என தெரிவித்துள்ளார்.

மேலும் இருவரது காதலுக்கு ஸ்ரீவித்யாவின் தாயார் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கைகூடாமல் போனதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேசமயம் ஸ்ரீவித்யா வேறொரு நபரை திருமணம் செய்த போதும், அவரது வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கவில்லை எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website