உல்லாசத்துக்கு மறுத்த பெண் – அம்மிக்கல் போட்டு கொன்ற கள்ளக்காதலன் வெறிச்செயல்.

June 20, 2022 at 12:45 pm
pc

கடலூர் மாவட்டம் புவனகிரியை அடுத்துள்ளது கீழமணக்குடி என்ற கிராமத்தில் வசித்து வருபவர் சீதா என்கிற சீதாலட்சுமி 45. இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டிற்குள்ளேயே அரை நிர்வாணத்துடன் சடலம் கிடந்துள்ளார். உடனே இதுகுறித்து போலீசுக்கு தகவல் தரப்பட்டது. புவனகிரி போலீசாரும் விரைந்து வந்தனர். சீதாவின் சடலத்தை கைப்பற்றி போஸ்ட்மார்ட்டம் செய்வதற்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. உடம்பெல்லாம் காயங்கள் இருந்ததால், யாரோ அடித்து கொன்றுள்ளார்கள் என்று மட்டும் போலீசார் சந்தேகித்துள்ளனர்.

இந்த கொலை தொடர்பாக சீதாவின் பக்கத்துக்கு வீட்டில் வசிக்கும் குமார் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.. இதனால், குமாரை தேட ஆரம்பித்தனர்.. இறுதியில், புவனகிரி பஸ் ஸ்டாண்டில் ஒளிந்து கொண்டிருந்த குமாரை சுற்றி பிடித்தனர்.. பிறகு தங்கள் பாணியில் கேள்விகளை கேட்க ஆரம்பித்தனர்.. அப்போதுதான் ஒன்றுவிடாமல் வாக்குமூலமாக சொன்னார் குமார்.. சீதா லட்சுமிக்கும், குமாருக்கும் கள்ளக்காதல் இருந்து வந்ததாம்.. பக்கத்து வீடு என்பதால், இருவரும் அடிக்கடி நெருக்கமாக இருந்துள்ளனர்..

க்கத்து வீடு என்றாலும், குமார் வெளியூர்களுக்கு கூலி வேலைக்காக அடிக்கடி செல்வாராம்.. இப்போதைக்கு புதுச்சேரியில் கொத்தனார் வேலை பார்த்து வருகிறார்.. அதனால், ஞாயிற்றுக்கிழமை மட்டும் சொந்த ஊருக்கு வருவார்.. அப்போதெல்லாம் சீதா லட்சுமியிடம் உல்லாசமாக இருந்துவிட்டு போயுள்ளார். அப்படித்தான், கடந்த 11ம் தேதி வீட்டுக்கு வந்துள்ளார்.. வந்த குமார் அன்றைய நாள் சீதா லட்சுமியை உல்லாசத்துக்கு அழைத்துள்ளார்.

ஆனால், சீதா லட்சுமி ஏற்கனவே ஒரு ஆண் நண்பரை வீட்டுக்கு வரசொல்லி இருக்கிறேன்.. அதனால், இன்றைக்கு வேண்டாம்.. உடனே அங்கிருந்து போகும்படி சொல்லி உள்ளார்.. இதைக் கேட்டதும் குமாருக்கு ஆத்திரம் வந்துள்ளது.. வாக்குவாதமும் தொடங்கி உள்ளது. சீதாலட்சுமி குமாரை ஆபாசமாக திட்டினாராம்.. அந்த கோபத்தில் அம்மிக் கல்லை எடுத்து வந்து, அவரது தலையில் போட்டு கொன்றுவிட்டதாக குமார் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website