உள்துறை அமைச்சரின் கருத்தால் கொந்தளித்த கவிஞர் வைரமுத்து!
இந்தி குறித்த மத்திய உள்துறை அமைச்சரின் கருத்துக்கு கவிஞர் வைரமுத்து கட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் இந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு உள்ள நிலையில், சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறிய கருத்து கண்டனங்களை பெற்றது. அனைவரும் இந்தி மொழியை எதிர்ப்பு இல்லாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அவர் கூறியிருந்தார்.
அமித் ஷாவின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், எக்காரணத்தைக் கொண்டும் இந்தி மொழி திணிப்பை ஏற்க முடியாது, மீண்டும் மொழிப்புரட்சி காலத்தை உருவாக்கிவிடாதீர்கள் என கூறினார்.
இந்நிலையில் கவிஞர் வைரமுத்து இந்தி திணிப்பு குறித்து கூறுகையில், ‘தமிழர்கள் இந்தி எதிர்ப்பு உணர்வில் அல்லாமல், இந்தி திணிப்பு எதிர்ப்பு உணர்வில் திளைத்தவர்கள்.
இந்தியை எதிர்ப்பது, இந்தி திணிப்பு எதிர்ப்பு என்பதில் தமிழர்கள் தெளிவாக உள்ளனர். எதிர்ப்பு இல்லாமல் ஏற்றுக் கொள்வதற்கு இந்தி என்ன குழந்தையின் முத்தமா?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.