ஊசி மூலம் செயற்கையாக வீங்க வைக்கப்பட்ட வயிறு! சிறுமிகளுக்கு நடந்த கொடுமை.. சாலையில் பிச்சை எடுக்க வைக்கப்பட்ட சிறார்கள்.
ஊசி மூலம் செயற்கையாக வீங்க வைக்கப்பட்ட வயிறு.
சாலையில் பிச்சை எடுக்க வைக்கப்பட்ட சிறார்கள்.
நைஜீரியாவில் சிறுவர், சிறுமிகளுக்கு ஊசி செலுத்தி அதன் மூலம் வயிற்றை வீங்க செய்து பிச்சை எடுக்க வைத்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Lagosல் தான் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக காவல்துறை செய்தி தொடர்பாளர் பெஞ்சமின் கூறுகையில், கிராம பகுதியில் இருந்து சில சிறார்களை 4 பேர் அழைத்து வந்தனர்.
பின்னர் மருத்துவர் மூலம் ஒரு ஊசியை அவர்களுக்கு செலுத்தினர். அந்த ஊசியை செலுத்துவது மூலம் அவர்களின் வயிறு வீங்கி பெரிதாகும். பின்னர் மோசமான நோய்வாய்ப்பட்டவர்கள் என கூறப்பட்டு சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளிடம் சிறார்கள் பிச்சை எடுக்க வைக்கப்படுகின்றனர்.
இந்த சம்பவங்கள் எங்கள் கவனத்திற்கு வந்த நிலையில் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தோம். தற்போது நான்கு பேரை கைது செய்துள்ளோம்.
இது போன்ற செயலை மேலும் சிலர் செய்வதாக தகவல் கிடைத்துள்ளது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம் என கூறியுள்ளார்.