எந்தவொரு விளையாட்டு வீரருக்கும் எடுத்துக்காட்டாக இருப்பவர்! ஜாம்பவானை நினைத்து உருகிய மெஸ்சி

September 16, 2022 at 6:28 pm
pc

சர்வதேச டென்னிஸில் இருந்து ஓய்வு பெறும் பெடரர் குறித்து பதிவிட்ட மெஸ்சி 

இனி டென்னிஸ் களத்தில் உங்களை தவற விடுவோம் ரோஜர் பெடரர் – லயோனல் மெஸ்சி 

சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக கூறிய ரோஜர் பெடரருக்கு கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி பிரியாவிடை அளித்துள்ளார்.

டென்னிஸ் உலகில் ஜாம்பவானாக இருக்கும் சுவிஸ் வீரர் ரோஜர் பெடரர் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக காயங்களுடன் கடுமையான போரை எதிர்கொண்டதால் வெளியேற வேண்டிய நேரம் இது என்று தனது உடல் தன்னிடம் கூறுவதாக பெடரர் ஓய்வினை குறிப்பிட்டார்.

அவரது இந்த அறிவிப்பு ரசிகர்கள் மட்டுமன்றி பல விளையாட்டு பிரபலங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அந்த வகையில் அர்ஜென்டினா கால்பந்து வீரர் லயோனல் மெஸ்சி தனது சமூக வலைத்தள பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், ‘பெடரர் ஒரு மேதை, டென்னிஸ் வரலாற்றில் தனித்துவமான மற்றும் எந்த விளையாட்டு வீரருக்கும் ஒரு எடுத்துக்காட்டு. உங்களது புதிய கட்டம் சிறப்பானது, களத்தில் எங்களை மகிழ்ச்சிப்படுத்திய உங்களை காண நாங்கள் தவறவிடுவோம் ரோஜர் பெடரர்’ என தெரிவித்துள்ளார்.   

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website