எந்த உணவோடு எதை சேர்த்து சாப்பிட கூடாது தெரியுமா …?

August 12, 2022 at 7:07 am
pc

நம் அன்றாட உணவில் சத்துக்கள் நிறைந்த இருவேறுபட்ட உணவுகளை ஒன்றாக சேர்த்து சாப்பிடும் போது, அது நமது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவுப் பொருட்களாக மாறுகிறது.
காலையில் வெறும் வயிற்றில் சூடான காபி, டீ குடிக்கக்கூடாது.

தண்ணீர் முதலில் குடித்துவிட்டு பிறகு அவற்றை குடிக்கலாம்.ஏனென்றால் அல்சர் பிரச்சனையை உண்டாக்கிவிடும்.
வாழைப்பழத்துடன் மோர், தயிருடன் பேரீச்சம்பழம், பால் மற்றும் மதுபானம். இவற்றை சேர்த்து உண்ணக்கூடாது. இது நம் உடலில் கபத்தை உருவாக்கிவிடும். அதன் காரணமாக வெகு எளிதாக மூச்சுத்திணறல் குறைபாடுகளை உண்டாக்கிவிடும்.


வெண்ணெயுடன் காய்கறிகளைச் சேர்த்துச் சாப்பிடக்கூடாது. ஏனென்றால் அது செரிமானக் கோளாறு ஏற்படுத்திவிடும்.
ஒரு டீஸ்பூன் தேன், ஒரு டீஸ்பூன் நெய். இரண்டையும் சேர்த்து உண்பது தவறு. அதாவது சம அளவுள்ள தேனும் நெய்யும் சேர்ந்தால் அது விஷம். தேவைப்படும்போது, கொஞ்சம் அதிகமாக தேன், குறைவாக நெய் அல்லது கொஞ்சம் குறைவாக தேன், அதிகமாக நெய் எனக் கலந்து சாப்பிட வேண்டும்.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website