எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது- நடிகர் கமல்ஹாசன்..வெற்றி கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும்!
வெற்றி கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும், ஒருபோதும் அவசரப்படக்கூடாது என மாணவர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை வழங்கினார்.
மாணவர்களுக்கு கமல்ஹாசன் அறிவுரை
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் கமல்ஹாசன், அங்கு மாணவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது மாணவி ஒருவர், மன அழுத்தம் காரணமாக தற்கொலைகள் அதிகரித்து வருகிறதே..அதற்கு உங்கள் அறிவுரைகள் என்ன? என்று கேட்டார்.
அதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், ‘நானும் தற்கொலை குறித்து 20, 21 வயதில் யோசித்து இருக்கிறேன். கலை உலகம் தன்னை கண்டுகொள்ளவில்லையே என்று ஏக்கத்தில் யோசித்து இருக்கிறேன். வெற்றி கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டும். ஒருபோதும் அவசரப்படக்கூடாது.
இருள் எப்போதும் உங்களுடனே இருக்கும் என்று கூறிவிட முடியாது. வெயில் வந்தே ஆகும். அதுவரை கொஞ்சம் பொறுமையாக இருங்கள். இரவு நேரத்தில் இருட்டு பயமாக உள்ளது என்றால், அதனை பிரகாசமாக்க கனவு காணுங்கள்.
கொண்டே இருந்தால் ஒருவேளை நடக்கலாம். நடக்கவில்லை என்றால் பிளான் ‘B’ என்ன என்பதை யோசிக்க வேண்டும். வாழ்க்கையில் ஒரு அங்கம் மரணம்.. அது வரும்போது வரட்டும், நீங்களாகவே தேடாதீர்கள்’ என கூறினார்.
நடிகர்-இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் தற்கொலை செய்துகொண்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது கமல்ஹாசன் இந்த அறிவுரைகளை மாணவர்களுக்கு வழங்கியுள்ளார்.