என்ன செய்தாலும் பொடுகு போகவில்லையா …?இத ஃபாலோ பண்ணுங்க..!!
இன்றைய காலத்தில் அனைவரும் சந்திக்கும் மிகப் பெரிய பிரச்சனையாகும். தலையில் இருக்கும் பூஞ்சைகள் மற்றும் இறந்த செல்களால் பொடுகு ஏற்படுகிறது. இதை ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டும். இல்லையென்றால் காலப்போக்கில் வெள்ளை செதில்களை ஏற்படுத்தி தலை முழுவதும் பரவி விடும்.
இந்த பொடுகு தலையில் அரிப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், கூந்தல் உதிர்வையும் ஏற்படுத்துகிறது. பொதுவாக, தலையை சுத்தமாக வைக்காமல் எண்ணெய் பசையாக இருப்பதாலும், அதிக ஷாம்பு கொண்டு முடியை அலசுவதாலும் வறட்சி ஏற்பட்டு பொடுகு ஏற்படுகிறது. இதை வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டே எளிதில் எளிதில் பொடுகை விரட்டியடிக்கலாம்.
பொடுகு தொல்லையில் இருந்து விடுபட இயற்கை வழி:
❖ பொடுகை விரட்டியடிப்பதில் முதலாவதாக இருப்பது இந்த வெந்தயம். 3 ஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து மறுநாள் காலையில் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள்.
❖ இந்த பேஸ்ட்டை உச்சந்தலை மற்றும் தலைமுடியில் தடவி, 30 நிமிடங்கள் கழித்து மைல்டான ஷாம்பு போட்டு அலசி விடுங்கள்.
❖ இதை வாரம் இருமுறை முயற்சி பாருங்கள், பொடுகு நீங்குவதோடு மீண்டும் வராது.
❖ இது நம்முடைய கூந்தல் வேர்களை வலுப்படுத்தி உச்சந்தலையை ஈரப்பதமாக்குகின்றன.
❖ அதுமட்டுமல்லாமல், முடி உதிர்வையும் தடுத்து கருமையான, அடர்த்தியான கூந்தல் வளர்ச்சிக்கும் உதவுகிறது.
குறிப்பு: சாலிசிலிக் அமிலம் மற்றும் வைட்டமின் ஈ ஆகியவற்றைக் கொண்டிருக்கும் பொடுகு எதிர்ப்பு ஷாம்புவை பயன்படுத்துங்கள்.