என்ன பண்ணாலும் இந்த கருவளையம் மட்டும் போகவே இல்லைனு வருத்தமா? இத ட்ரை பண்ணுங்க…!!
தற்போது உள்ள உணவு பழக்க வழக்கங்கள், மாசுபாடு, சுற்றுச்சூழல், அழகு சாதனப்பொருட்கள் ஆகியவற்றால் முகத்தில் ஏகப்பட்ட பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். பெண்களுக்கு அழகே பிரச்சனையில்லா பொலிவான சருமம் தான். இதை பெறுவதற்காக பலர் அழகு நிலையங்களுக்கு சென்று அதிக பணம் செலவழித்து பல ட்ரீட்மெண்ட்களை செய்து, பல பிரச்சனைகளையும் எதிர்கொள்கிறார்.
அவற்றிற்கு பதிலாக ஏன் இயற்கை பொருட்களை கொண்டு வீட்டிலேயே சில வீட்டு வைத்தியங்களை செய்யக் கூடாது? இயற்கை பொருட்களால் சருமத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. எனவே, முடிந்த வரை இம்முறைகளை கையாள முயற்சி செய்யுங்கள். அந்த வகையில், இப்போது தேனை வைத்து மிக மிக சுலபமான முறையில் வீட்டு வைத்தியத்தை பற்றி பார்க்கலாம்.
இந்த குறிப்பை பின்பற்றி வருவதன் மூலம் வாய் பகுதியைச் சுற்றி இருக்கும் கருவளையம், கண்ணுக்கு கீழே அசிங்கமாக இருக்கும் கருவளையம், கழுத்துப் பகுதியில் இருக்கும் கருவளையம் ஆகியவற்றை எளிதில் நீக்கிவிடலாம்.
தேன் – 1 ஸ்பூன், உருளைக்கிழங்கு சாறு – 1 டேபிள் ஸ்பூன் இரண்டையும் நன்றாக கலக்கி, இரவு தூங்க செல்வதற்கு முன்பு கண்ணை சுற்றியும் அப்ளைச் செய்யவும். அதேபோல், வாய் பகுதியில் இருக்கும் கருவளையத்தின் மீதும் அப்ளைச் செய்து கொள்ளவும், சிறிது நேரம் மசாஜ் செய்து, இரவு முழுவதும் அப்படியே விட்டு மறுநாள் கழுவிவிட வேண்டும்.
தினமும் இதை கடைப்பிடித்து வந்தால், கருவளையாம் படிபடியாக குறைந்து விடும். ஒருவேளை உங்களுக்கு கழுத்துப்பகுதியில் கருமையாக இருந்தால், இதையே முயற்சி செய்யவும். விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.