என்ன பிராண்ட் காண்டம் யூஸ் பண்றிங்கன்னு கூட கேப்பியா? நெட்டிசனை வறுத்தெடுத்த ஃபாத்திமா பாபு..!
நடிகை பாத்திமா பாபு சமூக வலைதளத்தில் தனது ரசிகர்களிடம் உரையாடிய போது கேள்வி கேட்ட ஒரு நெட்டிசனை ’என்ன காண்டம் யூஸ் பண்றீங்கன்னு கூட கேப்பியா? என சரியான பதிலடி கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தூர்தர்ஷனில் செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பிறகு திரைப்படங்களில் நடித்தவர் பாத்திமா பாபு. இவர் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார் என்பதும், அவ்வப்போது ரசிகர்களிடம் உரையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது
அதற்கு பதிலளித்த பாத்திமா பாபு ’ஒரு இந்துவை நான் பள்ளிவாசலில் திருமணம் செய்து கொண்டேன், எங்கள் குடும்பத்தில் யாருக்கும் அதில் எந்தவிதமான பிரச்சனையும் இல்லை. பொது மேடை என்றால் என்ன வேண்டுமானாலும் கேள்வி கேட்பாயா? என்ன காண்டம் யூஸ் பண்றீங்கன்னு கூட கேப்பியா? பொது மேடையாம்ல பொதுமேடை’ என்று பதிலடி கொடுத்ததை அடுத்து, கேள்வி கேட்ட அந்த நெட்டிசன் கப்சிப் ஆகி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.