‘என் கடினமான நாட்களில் தோனி மட்டுமேதான் என்னை தொடர்புக்கொண்டார்’ – விராட் கோலி உருக்கம்!

February 27, 2023 at 2:31 pm
pc

என்தன் கடினமான நாள்களின் போது தோனி மட்டும்தான் என்னை தொடர்புக் கொண்டார் என விராட் கோலி தெரிவித்துள்ளார். 

இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் தொடருக்கு இந்தியா மட்டுமல்லாது உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2008-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடர் சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 16-ஆவது ஐபிஎல் தொடர் இந்த ஆண்டு நடைபெறவுள்ளது.இதைத்தொடர்ந்து, இந்தாண்டுக்கான ஐபிஎல் தொடரின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, வருகிற மார்ச் 31-ஆம் தேதி தொடங்கி மே 21-ஆம் தேதி நிறைவடைகிறது.

இந்நிலையில், ஐபிஎல் குறித்த பேச்சுகள் சமூகவலைதளம் முழுக்க நீண்டுள்ளது. பல வீரர்களும் ஐபிஎல் குறித்து தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். 

இந்தாண்டு ஐபிஎல் மார்ச் 31-ஆம் தேதி துவங்குகிறது. இதையொட்டி நடந்த ஒரு நிகழ்ச்சியில் தோனி குறித்து விராட் கோலி பேசியது வைரலாகி வருகிறது. அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

2022-இல் என் கடினமான நாள்களின் போது தோனி மட்டும்தான் என்னை தொடர்புக் கொண்டார். அவருடன் இருக்கும் இந்தத் தூய்மையான உறவுக்கு நான் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன்.

ஒருமுறை தோனி எனக்கு குறுஞ்செய்தி அனுப்பினார். திடகாத்திரமான மனிதர்களை பார்க்கும்போதும், அப்படி இருக்கும் நபரிடமும் மக்கள் அவர்களிடம் எப்படி இருக்கிறாய் என கேட்க மறந்துவிடுகிறார்கள். இது எனக்கு அந்த நேரத்தில் மிகவும் உதவிகரமாக இருந்தது. அவர் மீது எனக்கு மிகப்பெரிய மரியாதை உள்ளது.

23 வயதில் இருந்து அவரிடம் துணை கேப்டனாக இருந்துள்ளேன். அவர் என்னை கேப்டனாக தேர்ந்தெடுத்த பிறகு அவருக்கும் எனக்கும் மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டது. என்னால் எப்போது வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் அவரிடம் சென்று கேட்க முடியும். எங்கள் இருவருக்கும் இந்த புரிதல் இருக்கிறது.

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website