என் சகோதரர்கள் குடிகாரர்கள்! அம்மா ஊதாரித்தனமாக.. கலங்கிய பிரபல நடிகை சங்கீதா…

October 12, 2022 at 2:51 pm
pc

வீட்டை விட்டு துரத்தியதாக புகார் கூறிய நடிகை சங்கீதாவின் தாய் 

தன் அம்மாவும், சகோதரர்களும் ஊதாரித்தனமாக நடந்து கொள்வார்கள் என குற்றம்சாட்டியுள்ளார் 

நடிகை சங்கீதா என் விடயத்தை பொறுத்தவரை என் அம்மா தப்பு என நடிகை சங்கீதா மன வருத்தத்துடன் பேசியுள்ளார். 

தமிழில் காதலே நிம்மதி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சங்கீதா. பிதாமகன் படத்தின் மூலம் பிரபலமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்த சங்கீதா, கடந்த 2009ஆம் ஆண்டு பாடகர் கிரிஷை காதலித்து திருமணம் செய்தார்.

இந்த நிலையில் நடிகை சங்கீதாவின் தாயார் தனது மகள் மீது பல குற்றச்சாட்டுகளை வைத்தார். குறிப்பாக தன்னை வீட்டை விட்டு துரத்திவிட்டதாக சங்கீதா மீது புகார் அளித்தார்.

இதுகுறித்து பேசிய நடிகை சங்கீதா, ‘நான் கஷ்டப்பட்டு நடித்து சேமித்து வைத்த பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்யும் போது அதற்கு சில கட்டுப்பாடுகள் கொண்டு வந்தேன். 

இப்போது கூட அவர்களுடைய செலவை நான் தான் பார்த்துக் கொள்கிறேன். ஆனால் அதனை குறைத்துக் கொண்டேன். ATM இயந்திரத்தில் பணம் வரவில்லை என்றால் கோபத்தில் அதனை தட்டி பார்ப்போம், கொட்டிப் பார்ப்போம் அல்லவா? அதுபோலத் தான் இப்போது என்னிடம் இருந்து பணம் அவர்களுக்கு போகவில்லை என்பதால் என் மீது குற்றம் கூறுகிறார்கள்.

என் அம்மா கூறுவது எல்லாம் பொய்யான குற்றச்சாட்டு. குடும்ப சூழ்நிலை காரணமாக 14 வயது இருக்கும்போதே என்னை நடிக்க அனுப்பி வைத்து விட்டார்கள். என்னுடைய சகோதரர்கள் குடிகாரர்கள். 

அம்மா ஊதாரித்தனமாக செலவு செய்வார்கள். மொத்த குடும்ப சுமையையும் என் மீது சுமத்தி நடிக்க வைத்தார்கள். யாராக இருந்தாலும் ஒரு அம்மாவை குற்றம் சுமத்த மாட்டார்கள். ஆனால், எங்கள் விடயத்தை பொறுத்தவரை என் அம்மா தப்பு’ ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்.    

Quick Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




You cannot copy content of this Website